அமெரிக்காவிலிருந்து வந்த கையோடு சந்தியாவிற்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார் அவரது அண்ணன்.

Raja Rani2 Episode Update 21.02.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. தன்னுடைய அண்ணன் மீண்டும் தங்களது பழைய வீட்டை வாங்கிய பிறகு அந்த வீட்டிற்கு வந்த சந்தியா வெளியிலேயே நின்று பழைய நினைவுகளை அசைபோட்டு கண் கலங்குகிறார். கூட வந்த சரவணன் சந்தியாவிற்கு ஆறுதல் கூற பிறகு பக்கத்து வீட்டிற்கு சென்று வீட்டு சாவியை எடுத்து திறந்து பார்க்க வீடு முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு அலங்காரங்களுடன் அற்புதமாக இருந்தது.

இதைப் பார்த்த சந்தியா பக்கத்து வீட்டில ஒருத்தங்க இருக்காங்க அவங்க கிட்ட சொல்லி அண்ணா சுத்தம் பண்ண சொல்லிடுச்சு போல அதனாலதான் வீடு இப்படி இருக்கு என கூறுகிறார். பிறகு சரவணனை உட்கார வைத்து உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்லிவிட்டு உள்ளே சென்று தன்னுடைய சிறுவயது ஆல்பங்களை எடுத்துவந்து காண்பிக்கிறார்.

பிறகு ரொம்ப நேரம் இங்கேயே இருந்தால் அத்தை திட்டு வாங்க கடைக்கு போங்க என சந்தியா சரவணனை கடைக்கு அனுப்ப சரவணன் முகத்தை சோகமாக வைத்து கடைக்குச் செல்கிறார். உடனே சந்தியா ஓடிவந்து சரவணன் கட்டிப்பிடித்து இப்படி முகத்தை வச்சிட்டு போகாதீங்க நல்லா இல்லை என கூறுகிறார். மேலும் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ சோ மச் என சொல்ல சரவணன் அதை கவனிக்காமல் இருந்துவிட பின்னர் சந்தியா சொன்னது ஐ லவ் யூ என புரிந்து கொண்டு மீண்டும் ஒரு முறை சொல்லுங்க என கேட்கிறார். முடியாது என அடம்பிடிக்க சந்தியா அதன் பிறகு ஒரே ஒரு முறை தான் சொல்லுவேன் என சொல்லிவிட்டு மீண்டும் ஐ லவ் யூ சோ மச் என கூறுகிறார். நானும் ஐ லவ் யூ மச் என சரவணன் பதிலுக்கு கூறுகிறார். பிறகு சரவணன் சந்தியாவின் முத்தமிட செல்ல இந்த நேரத்தில் காலிங் பெல் அடிக்கிறது.

கதவைத் திறந்து பார்த்தால் சந்தியாவின் அண்ணனும் அண்ணியும் குழந்தையோடு வந்து நிற்கின்றனர். உடனே அவர்களுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்கிறார் சந்தியா. அவர்கள் உள்ளே வந்ததும் பேசிவிட்டு பிறகு இருவரும் குழந்தையை வாங்கி மாறி மாறி கொஞ்சு கின்றனர். சந்தியாவின் அண்ணி அமெரிக்கா சாக்லேட்டுகளை காட்ட உடனே படு குஷி ஆகி விடுகிறார் சந்தியா.

அதன் பின்னர் ரூமுக்குள் சந்தியாவும் அவருடைய அண்ணன் பேசிக்கொண்டிருக்கும் போது இந்த முறை நான் ஒரு முடிவோடு வந்திருக்கிறேன் என சந்தியாவின் அண்ணன் சொல்கிறார். அது என்ன என சந்தியா கேட்க இந்த முறை கை கால்ல விழுந்தாவது சரவணனிடம் உன்னுடைய கனவைப் பற்றி சொல்லப்போகிறேன்‌. சரவணன் கிட்ட மட்டும் இல்ல உங்க மாமனார் மாமியார் கிட்ட இதைப் பத்திச் சொல்ல போகிறேன். நான் எவ்வளவு செல்ஃபிஷா இருந்தேன் என்பது எனக்கு குழந்தை பிறந்த பிறகுதான் புரிந்தது.

இதைக் கேட்ட சந்தியா அதிர்ச்சி அடைந்து தயவுசெய்து இப்போதைக்கு எதுவும் சொல்லாத. அந்த வீட்டில விட்டுக்கொடுப்பது அன்பு பாசம் இதெல்லாம் தான் முக்கியம். அது எனக்கு பிடித்து விட்டது என சந்தியா சொல்கிறார். குடும்பம்னு வந்துட்ட பிறகு எல்லோரும் சில விஷயங்களை தியாகம் பண்ணிதான் ஆகணும். நானும் அப்படி என்னுடைய கனவை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து விடுவேன் என சந்தியா சொல்கிறார்.

நீ இப்படிச் சொல்லும்போது உனக்குள்ள எவ்வளவு வலி இருக்கும் என்று எனக்கு புரியுது. சரவணனுக்கு இதை புரிய வைக்கணும் என சந்தியாவின் அண்ணா சொல்ல தயவு செய்து இந்த பேச்சை இப்படியே விட்டுவிடு என சந்தியா கேட்டுக் கொள்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.