சரவணனை மயக்கி குழந்தை பெற்றுக் கொள்ள சந்தியா செய்த செயலால் அதிர்ச்சி அடைந்துள்ளார் சரவணன்.

Raja Rani2 Episode Update 14.03.22 : தமிழ் சினிமாவில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இடையை எபிசோடு சிவகாமி சந்தியாவின் அப்பா அம்மாவின் போட்டோவை பார்த்தால் சந்தியாவிற்கு அவருடைய கனவில் ஞாபகத்திற்கு வரும் சரவணனுக்கு சந்தியாவின் கனவை நிறைவேற்ற வேண்டும் என சிந்தனை வரும் அதனால் அந்த போட்டோ அங்கே இருக்கக் கூடாது என முடிவு செய்கிறார். சந்தியா தன்னுடைய அப்பா மாதிரி ஃபோட்டோ வேண்டும் என்று சிவகாமி சொன்னதை யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் உள்ளே வந்த சிவகாமி புருஷன் பொண்டாட்டி இருக்கிற இடத்துல இறந்து சாமியான அப்பா அம்மாவோட போட்டோ இருக்கக் கூடாது, அது உங்களுக்கு நல்லது இல்லை என கூறுகிறார். எல்லாம் உங்களோட நல்லதுக்குத்தான் சொல்றேன் தப்பா நினைச்சுக்காத எனவே இந்த போட்டோவை கழட்டி எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்து விடுகிறார்.

இதனால் சந்தியா மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார். அதன் பின்னர் எல்லோரும் சாப்பிடும்போது சந்தியா இப்போது எல்லா வேலையும் கத்துக்கிட்டா வந்த ஒரு பாருங்க இந்த குடும்பத்தோட போய் அவகிட்ட நான் ஒப்படைக்கிறேன் என்று சிவகாமி பாராட்டிக் கூறுகிறார். இதைக்கேட்டு வீட்டில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைகின்றனர். நான் உண்மையை டான்ஸ் உடன் எப்போதும் மனதில் இருப்பதை தான் சொல்லுவேன் என சிவகாமி கூறுகிறார். சரவணன் அம்மா மனதில் வைத்துக்கொண்டுதான் பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொள்கிறார்.

பிறகு செந்தில், அர்ச்சனாவும் தூங்கிக் கொண்டிருக்க நடு இரவில் கண் விழிக்கிறார் அர்ச்சனா. சாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்க 10,000 ரூபாய் பணம் வேண்டும், கையில் 5000 ரூபாய் தான் இருக்கு என்பதால் செந்தில் வைத்த பணத்தில் இருந்து 5 ஆயிரத்தை ஆட்டையை போட முடிவு செய்கிறார். நைசாக பணத்தை எடுக்க முயற்சி செய்ய செந்தில் தூக்கத்தில் அசைவதைப் பார்த்து பயந்து விடுகிறார்.

இந்த பக்கம் சந்தியா சிவகாமி சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு அத்தைக்கு தான் போலீசார் அதில் சுத்தமாக விருப்பமில்லை என்ற குடும்ப பெண்ணாக நடந்து கொள்வது தான் சரி என முடிவு செய்து தலை நிறைய மல்லிகை பூவை வைத்துகொண்டு மேக்கப் செய்து கொண்டு சரவணன் வந்ததும் அவரை கட்டித்தழுவி இன்று முதல் வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். எல்லோரும் ஆசைப்படுற மாதிரி ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளலாம் என கூறுகிறார்.

உடனே கடுப்பான சரவணன் உங்களுடைய கனவை தூக்கி போட்டுட்டு எப்படி உங்களால் இப்படி பேச முடிகிறது? அன்னைக்கு உங்களுடைய கனவை எனக்கு தெரியதது நீங்க படிங்க என்று சொன்னதும் நீங்க எவ்வளவு ஆர்வமாக படிச்சீங்க. அப்படி இருக்கும் போது உங்களால் எப்படி இப்போ இப்படி பேச முடியுது. கண்டிப்பா நீங்க மனசுல ஏதோ வச்சிக்கட்டு தான் பேசுறீங்க, நான் நேரடியாகவே கேட்கிறேன் அம்மா என்ன சொன்னாங்க என இருக்கிறார். அத்தை எதுவும் சொல்லல என சந்தியா சொல்ல அதனை சரவணன் நம்பவில்லை. உன்கிட்ட எதுக்கு உண்மையை மறைக்க இருங்க நான் உங்களுக்கு ஆதரவா இருப்பேனு தானே சொல்கிறேன். என்ன தடை வந்தாலும் உங்களை போலீஸ் ஆக்காமல் விடமாட்டேன் என கூறிவிட்டு வெளியே செல்கிறார். அப்போது இங்கே இருந்த உங்க அப்பா அம்மா போட்டோ எங்கே என சரவணன் கேட்க ருசியாக இருந்ததால் உடைத்து உள்ளே வைத்து இருக்கிறேன் என சந்தியா பொய் சொல்லி விடுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.