இறுதிப் போட்டியை நினைத்து சரவணனுக்கு பயம் வந்துவிட்டது.
Raja Rani 2 Episode Update 31.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் இறுதிப் போட்டிக்கு தெரிவாகி விட்ட நிலையில் அனைவரும் அவரை பாராட்டுகின்றனர். பிறகு சிவகாமி கோவில் பற்றி பேச சந்தியா பக்கத்திலேயே ஒரு கோவில் இருக்கு என கூறுகிறார். அதன் பிறகு எல்லோரையும் கோவிலுக்கு போயிட்டு வரலாம் என அழைக்கிறார் சிவகாமி.
ஆனால் சரவணன் நீங்க போயிட்டு வாங்க அம்மா நான் நாளைக்கு சமைக்கிறதுக்கு ஏதாவது செஞ்சு பார்க்கிறேன் என கூறுகிறார். வீட்டில் உள்ளவர்கள் மற்றவர்களும் நாங்கள் வரவில்லை என சொல்லிவிட சிவகாமி தன்னுடைய கணவரை மட்டும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்கிறார்.
இந்தப்பக்கம் ஹேனா தனியாக அமர்ந்து கொண்டிருக்க அவரது அறிவின் செல்கிறார் ஷல்மா. அப்போது அவர் சரவணனைப் பற்றி பேச சல்மா கடுப்பாகிறார். சரவணனுக்கு திறமை இல்லை இது வரைக்கும் லக்கை மட்டும் வைத்துக் கொண்டு முன்னேறி வந்து விட்டார். அவர் ஏமாற்றி பைனலுக்கு வந்துவிட்டார் என கூறுகிறார். ஆனால் ஹேனா சரவணனுக்கு ஆதரவாக பேசி விட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். சல்மா பயங்கர கடுப்பில் இருக்க அப்போது வந்த அர்ச்சனா சரவணன் வெளிநாட்டு உணவுகள் எதுவும் சமைக்க தெரியாமல் தலையில் கை வைத்துக்கொண்டு அமர்ந்து கொண்டிருக்கிறார். நாளைக்கு போட்டியில் அவர் ஜெயிக்கிறதுக்கு வாய்ப்பே இல்லை என அர்ச்சனா சொல்கிறார். இதனால் ஷல்மா மகிழ்ச்சி அடைகிறார்.
இந்த பக்கம் ஆதியும் அர்ச்சனாவும் வழக்கம்போல சரவணன் ஜெயிக்க மாட்டார் என சொல்லிக்கொண்டு இருக்க பார்வதி அவர்களுக்கு பல்ப் கொடுக்கிறார். செந்திலும் நம்ம வீட்டுல சரவணனுக்கு குக்ன்னா இவங்க ரெண்டு பேரும் கோமாளிகள் என கூறுகிறார். அண்ணா ஜெயிச்சு கப்போடு ஊருக்கு நாளைக்கே கிளம்பிடுவோம் என யோசிக்கும் போது கஷ்டமாக இருக்கு என பார்வதி சொந்த பேராசைப் படாத என கூறுகின்றனர். மீண்டும் ஆதியும் அர்ச்சனாவும் பல்பு வாங்க அந்த நேரத்தில் சிவகாமி வந்துவிடுகிறார்.
பிறகு அவர் சரவணனைப் பற்றி கேட்க அர்ச்சனா அவர் சமைக்கத் தெரியாமல் தடுமாறிக் கேட்டிருக்காரு. அவ சமைச்சு பார்த்ததை சாப்பிட்டுப் பார்த்தேன் அவ்வளவு கேவலமாக இருந்தது என அர்ச்சனா கூறுகிறார். பிறகு சிவகாமி சரவணனை பார்த்து விட்டு வருகிறேன் என செல்கிறார்.
இந்த பக்கம் சரவணன் மிகுந்த மனவருத்தத்தில் இருக்க சந்தியா சாப்பிடுங்க சாப்பிட்டாலே நல்ல யோசனைகள் தோன்றும் என கூறுகிறார். ஆனால் சரவணன் வேண்டாம் வேண்டாம் என கூறிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் சிவகாமி இருந்து அவருக்கு ஆறுதல் கூறி சாப்பாடு ஊட்டி விடுகிறார். நாளைக்கு வர நடுவரை பற்றி கவலைப்படாத. உனக்குத்தான் அது வெளிநாட்டு உணவு, ஆனா அவருக்கு நம்ம ஊரு சாப்பாடுதான் வெளிநாட்டு உணவு எனக் கூறுகிறார். உடனே சரவணன் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அதன்பிறகு நாளைக்கு எனக்கு என்ன சமைக்கணும் என்று தெரிந்துவிட்டது. அது சர்ப்ரைஸ் என சந்தோஷத்தோடு உள்ளே எழுந்து செல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.