போட்டி நடத்தும் குழுவினர் கொடுத்த அதிர்ச்சியால் போட்டியை விட்டு பாதியில் சரவணன் வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது.
Raja Rani 2 Episode Update 24.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. அடுத்த போட்டியில் அனைவரும் சிக்கன் மட்டுமே சமைக்க வேண்டும் என போட்டி நடத்தும் குழுவினர் கூறியுள்ளனர். இதனால் சரவணன் உட்பட அனைவரும் மகிழ்ச்சியில் இருக்க ஆதி நல்லா செய்கிற ஜிலேபியை சொதப்பிட்ட.. இதுல ரொம்ப சந்தோஷ பட்டுக்காத என நக்கல் அடிக்கிறார்.
உடனே சரவணன் ஜெயிக்கிறமோ கொடுக்கிறோமோ அது வேற விஷயம். ஆனா விழுந்த நாலுபேர் சிரிக்கராங்கனு அப்படியே இருந்துவிட கூடாது. முடிகிற அளவுக்கு முயற்சி பண்ணனும். அதனால் இப்போதான் புரிஞ்சுகிட்டேன் நாளைக்கு உனக்கு பயன்படும் என கூறுகிறார். இதைக் கேட்ட சிவகாமியின் அவருடைய கணவரை கைத்தட்டி சரவணனை பாராட்டுகின்றனர்.
பிறகு அவர்கள் வந்ததும் நாளை போட்டியில் சிக்கன் தான் சமைக்க வேண்டும் என சொல்லியுள்ளார்கள். சரவணன் வெற்றி பெறுவது உறுதி என அனைவரும் கூறுகின்றனர். இதைக்கேட்டு சிவகாமியும் அவருடைய கணவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு ஊரில் காப்பு கட்டி விட்டார்கள் அசைவம் சாப்பிடவோ சமைக்கவோ கூடாது என கூறுகின்றனர்.
இதனால் என்ன செய்வது எனத் தெரியாமல் அனைவரும் தவிக்க சிவகாமி அசைவம் கண்டிப்பாக சமைக்கக் கூடாது என கூறி விடுகிறார். இதனால் அர்ச்சனா ஒரே குஷியா இருக்கிறார். அதன்பிறகு சந்தியா போட்டி நடத்தும் குழுவினருடன் பேசிப்பார்க்கலாம் என சொல்லிவிட்டு சரவணனை அழைத்துச் சென்று அவர்களிடம் சைவ சமைக்க ஏற்பாடு செய்ய முடியுமா அல்லது இந்த போட்டியை ஊரில் திருவிழா முடியும்வரை தள்ளி வைக்க முடியுமா என கேட்கிறார். அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என கூறிவிடுகின்றனர். விருப்பமிருந்தால் போட்டியில் கலந்து கொள்ளுங்கள் இல்லையேல் விலகிவிடுங்கள் அதில் பிரச்சனை இல்லை என கூறி விடுகின்றனர்.
இதை வந்து சிவகாமியிடம் சொல்ல அவர்கள் போட்டி வேண்டாம் கிளம்பி விடலாம் என கூறி விடுகிறார். சரவணன் சரி என சொல்லி விடுகிறார். அர்ச்சனா நம்ப போட்டியில் கலந்துக்க வேண்டும் இங்கு இருந்து யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்த்துட்டு போகலாம் என கூறுகிறார். ஆதியும் அதையே சொல்ல பார்வதி நாம கிளம்பி விடலாம் என சொல்கிறார்.
சிவகாமியும் நாம் இங்கே இருக்கவேண்டாம் அது சரவணனுக்கு ஒரு மாதிரி இருக்கும் நாம கிளம்பி விடலாம் டிக்கெட் போடுங்க என சொல்லி செந்திலை அனுப்பி வைக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.