நண்பர்களைப் பார்த்தும் அதிர்ச்சி அடைந்துள்ளார் சந்தியா.
Raja Rani 2 Episode Update 06.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோட்டில் வீட்டுக்கு வந்த சந்தியாவின் தோழிகள் சந்தியாவின் ஸ்கூல் பிரெண்ட் என சொல்லி சமாளித்து விடுகின்றனர். பிறகு மூவரும் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருப்பதை பார்த்த சிவகாமி கடுப்பாகி சந்தியாவிற்கு போன் போட்டு எங்க இருக்க சீக்கிரம் வீடு வந்து சேரும் என ஆவேசமாக பேசி விட்டு எழுந்து உள்ளே சென்று விடுகிறார். பிறகு அர்ச்சனாவையும் அழைத்துக் கொள்கிறார்.
அதன்பிறகு சந்தியா வீட்டுக்கு வர தோழிகளை பார்த்ததும் அதிர்ச்சி அடைகிறார். பிறகு அவர்கள் பயப்படாதீங்க நான் ஸ்கூல் பிரெண்ட்ஸ்னு தான் சொல்லியிருக்கோம் நீங்களும் அப்படியே மெயிண்டெயின் பண்ணிக்கங்க என சொல்கிறார். பிறகு அவர்கள் சந்தியாவிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது உங்க மாமியார் எப்பவுமே இப்படித்தானா அவ்வளவு பேசுறாங்க என்ன சொல்ல உண்மை தெரியாமல் எதுவும் பேசாதீங்க. நீங்க பேசுறது பாருங்க அதுக்கு பின்னாடி இருக்க அன்பை பார்க்கிறேன். எனக்கு இன்னொரு அம்மா மாதிரி சொல்லப் போனா அவங்க குழந்தை மாதிரி மனசுல பட்டதை அப்படியே பேசிடுவாங்க என்ன சொன்ன சிவகாமி இதைக் கேட்டு சந்தோஷப்படுகிறார்.
பிறகு சந்தியா சரவணனை தனியாக சந்தித்து அத்தையிடம் சீக்கிரம் உண்மையை சொல்லி நீங்க இப்படியே எவ்வளவு நாளைக்கு நாளைக்கு மறைத்து வைக்க முடியும். அவங்களா தெரிஞ்சிக்கிட்டா அது பெரிய பிரச்சனையாகும் நாமலா சொன்னா வருத்தம் மட்டும் தான் என கூறுகிறார். சரவணன் சீக்கிரம் சொல்லிடலாம் என்று கூறுகிறார்.
அதன் பிறகு எல்லோரும் வீட்டில் இருக்கும் போது பார்வதி நிகழ்ச்சியோட ஓடி வந்து நான் பாஸ் பண்ணிட்டேன் என கூறுகிறார். எல்லோரும் அவரை வாழ்த்த பிறகு எவ்வளவு மார்க் என பார்க்க 75% என சொல்கிறார். அதன்பிறகு பார்வதியுடன் கல்யாண விஷயம் பற்றி பேசனும் அவள் பாஸ் பண்ணி விஷயத்தை மாப்பிள்ளைக்கு சொந்தம் என அவருடைய அப்பா கூட அத சொல்லாதீங்க நானே சொல்லிக்கிறேன் என கூறுகிறார்.
அதன்பிறகு செந்தில் கடையில் இருக்கும்போது அர்ச்சனாவை தேடி போலி சாமியாரின் ஆட்கள் வருகின்றனர். அர்ச்சனாவின் பார்க்க வந்ததாக கூற என்ன விஷயம் என செந்தில் கேட்டுக்கொண்டிருக்க அதற்குள் அர்ச்சனா வந்துவிடுகிறார். ஒருவழியாக இவர்களை கூட்டிச்சென்று என்ன எது எனக் கேட்க துணி எடுக்க வந்ததாக கூறுகின்றனர். 6 ஆயிரம் ரூபாய்க்கு பட்டுத் துணியை எடுத்துவிட்டு பணம் தர மறுக்கின்றனர். பணம் கொடுக்கலாமா எப்படி வீட்ல மதிப்பெண் என அர்ச்சனாவை சொல்ல சாமிக்கு கொடுக்க வேண்டிய தட்சணையில் கழித்து கொள் என்று கூறுகின்றனர். அர்ச்சனா நடவடிக்கையில் செந்திலுக்கு சந்தேகம் வந்து என்ன ஏது என கேட்க அர்ச்சனா மழுப்பி விடுகிறார். இதனால் செந்தில் அர்ச்சனா தவறு செய்வது உறுதி என புரிந்து கொள்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.