![IMG_20220831_083436](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/08/IMG_20220831_083436-696x425.jpg)
பெண் பார்க்க போன இடத்தில் ஆதிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் வள்ளி பாட்டி ஆதிக்கு கல்யாணம் பண்ண வேண்டும் என்று முடிவெடுக்க சிவகாமி சரியென சொல்ல சந்தியா ஜெஸ்ஸி பிரச்சனையே முடியல அதுக்குள்ள எதுக்கு அவசர படனும் என சொல்ல வள்ளி என்ன பண்ணிடுவாங்க வந்து தலையை வாங்கிடுவாங்களா? யாராக இருந்தாலும் வீட்டு வாசப்படி வந்து ஏற சொல்லு நான் பார்த்துக்கிறேன் என கூறுகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/08/IMG_20220831_083234.jpg)
அடுத்ததாக சந்தியா சரவணன் நீ சந்தித்து உங்களுக்கு இது தப்பாவே தெரியலயா? நீங்க இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்க மாட்டீங்களா? என சத்தம் போட சரவணன் இதுல என்னால எதுவும் பண்ண முடியாது என வீட்டுக்கு கிளம்பி விடுகிறான். மறுநாள் காலையில் ஆதி மாப்பிள்ளை போல தயாராகி ரெடியாக இருக்க ஜெசி தொடர்ந்து போன் அடிக்க அதை எடுக்காமல் கட் செய்கிறான்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/08/IMG_20220831_083520.jpg)
பிறகு சரவணன் ஆதியை தைரியமாக எதுவாக இருந்தாலும் பார்த்துக்கலாம் என ஆறுதல் கூறுகிறார். ஜெஸ்ஸி ஒரு முடிவெடுக்க போவதாக கூறுகிறார். அடுத்ததாக அனைவரும் பெண் பார்க்க செல்ல ஆதி பெண் பிடித்திருப்பதாக கூற பெண்ணை பார்த்தால் ஜெஸ்ஸி நிற்பது போல தெரிய ஆதி அதிர்ச்சி அடைகிறான்.