சிவகாமியை மீறி சரவணனின் அப்பா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சிவகாமி காலையில் எழுந்து அமர்ந்து கொண்டிருக்க அந்த நேரத்தில் அந்த சரவணன் அப்பா சரவணன் சந்தியா இந்த குடும்பத்துக்காக என்னவெல்லாம் செய்திருக்கிறார்கள், அவர்களின் உழைப்பில் சுகம் கண்ட நாம அவர்களுக்கு என்ன செய்திருக்கிறோம் அவர்களை சந்தோஷத்தை கூட நிறைவேற்ற கூடாதா? கடைசி வரைக்கும் சரவணன் இந்த குடும்பத்துக்காக உழைத்து சாக வேண்டும் என ஏதாவது எழுதி இருக்கா? என்ன சிவகாமியிடம் ஆவேசமாக பேசி முதல் முறையா ஒரு முடிவு எடுத்து இருக்கேன் என சொல்லி சரவணன் சந்தியாவை வீட்டுக்குள் அழைக்கிறார்.

இருவரும் தயக்கத்துடன் வேண்டாம் வேண்டாம் என சொல்ல அவர்களை உள்ளே அழைத்து வருகிறார். பிறகு சரவணன் சிவகாமியிடம் உங்ககிட்ட உண்மைய சொல்லுங்கன்னு சந்தியா ஆரம்பத்தில் இருந்து சொல்லிக்கிட்டு தான் இருந்தாங்க நான் தான் உங்களுக்கு பயந்து அப்புறம் சொல்லலாம் அப்புறம் சொல்லலாம் என தள்ளிப் போட்டுக் கொண்டே இருந்தேன். உங்ககிட்ட மறைக்கணும்னு நினைக்கல நீங்க கோபப்படுவீங்கன்னு தான் பயந்தேன் என கூறுகிறார்.

பிறகு சந்தியா உங்க பையன் நைட் எல்லாம் தூங்கவே இல்ல உங்கள நினைச்சு தான் புலம்பிக்கொண்டே இருந்தாரு உங்க ரெண்டு எந்த இடைவெளியில் வந்திடக் கூடாது என்று தான் என்னைக்கும் நெனச்சிருக்கேன் அவர ஏத்துக்கங்க எப்பவும் போல அவர்கிட்ட பேசுங்க. நாங்க செஞ்சது தப்புதான் சின்ன தப்போ பெரிய தப்போ உங்கள கஷ்டப்படுத்தி இருக்கோம் மன்னிச்சிடுங்க என இருவரும் காலில் விழுந்து அழுகின்றனர். ஆனால் சிவகாமி பதில் ஏதும் பேசாமல் அப்படியே அமைதியாகவே சிலை போல நிற்கிறார்.

இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.