சரவணன் சந்தியாவை பழிவாங்க அர்ச்சனா செய்த வேலையை முறியடித்துள்ளார் சரவணன்.
Raja Rani 2 Episode Update 22.03.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியல் இன்றைய எபிசோடில் செந்தில் என்னை திட்டிக் கொண்டே இருக்க இந்த சந்தியா தான் காரணம் அவளை சும்மா விடக்கூடாது. இந்த மார்க்கெட் விஷயத்தை வச்சி ஒன்னும் செய்ய முடியாது என முடிவு செய்து விக்கிக்கு ஃபோன் போடுகிறார்.
பிறகு மறுநாள் காலையில் வீட்டில் அவருடைய அப்பா கருணாகரனுடன் மார்க்கெட்டிற்கு வருகிறார். மார்க்கெட்டுக்கு வந்த அவர்கள் இனி இந்த மார்கெட் மொத்தமும் என்னோட கண்ட்ரோல். நான் தான் இங்க சேர்மன். இங்க நாங்க சொல்றத கேட்டா கடை நடத்த முடியும் என உங்களால் ஒன்றும் செய்யமுடியாது என மிரட்டுகின்றனர். பிறகு சரவணனிடம் சென்று உன் பொண்டாட்டி என்ன அரசியலிலையே நிற்க விடாமல் பண்ணா, நீ என் பையன் நாளையே கை வெச்சிட்டே உன்னை பழி வாங்கத்தான் இங்க வந்து இருக்கோம். ஒழுங்கு மரியாதையா கடையை மூடிட்டு இந்த ஊரை விட்டு ஓடி விடு அதுதான் உனக்கு நல்லது. இனிமே உங்கள நிம்மதியா வாழ விட மாட்டோம் என கூறுகிறார். இந்த நேரத்தில் சந்தியாவும் இங்கு வந்து விட அவரிடமும் சவால் விட்டு செல்கிறார் கருணாகரன்.
பிறகு சந்தியாவும் சரவணனும் என்ன செய்வது என இது பற்றி பேச சந்தியா நகராட்சியில் புகார் அளிக்கலாம் இவர்களுக்கு எதுக்கு நாம பணம் கொடுக்கணும் என சொல்கிறார். சரவணன் இல்ல வேண்டாம் அது பெரிய பிரச்சனையாகிவிடும் அம்மாவுக்கு தெரிந்தால் வருத்தப்படுவார்கள். பார்வதி விக்கி விஷயம் வெளியே தெரிந்தால் நீயும் கஷ்டப்படுவாங்க என கூறுகிறார். இத கொஞ்சம் பொறுமையா தான் செய்யணும் என சொல்கிறார்.
ஆனால் மறுநாள் விக்கி அடியாட்களுடன் மார்கெட்டுக்கு வந்து கடைக்கு 8000 தள்ளுவண்டிக்கு 5 ஆயிரம் தரவேண்டும் என கூறுகிறார். ஒரு தள்ளுவண்டி போட்டு இருந்த ஒருவரிடம் பணம் கேட்க அவர் நான் எதுக்கு உங்களுக்கு பணம் தரணும்? நகராட்சிக்கு தானே கொடுக்கணும் உங்களுக்கு தரமுடியாது என கூறுகிறார். பணம் தர முடியாதா என விக்கி அந்த மனுஷனை பிடித்து அனைவர் முன்பும் அடிக்கிறார். கேட்டது கொடுக்கலைன்னா இது தான் எல்லோருக்கும் நடக்கும் என கூறுகிறார்.
இதைப்பார்த்த சரவணன் ஓடிவந்து விக்கியை பளார் என ஒரு அறை விடுகிறார். எதிரே இருப்பவர்கள் யார் என்றே தெரியாத அளவிற்கு பலமாக அடி வாங்குகிறார் விக்கி. அதன்பிறகு அவருடன் வந்த ரவுடி ஆட்கள் ரவுண்ட் கட்டி நிற்க சரவணனுக்கு ஆதரவாக மார்க்கெட்டில் உள்ள மொத்த கடைக்காரர்களும் ஒன்றுகூடி சவுண்டு கொடுக்க விக்கி உடன் வந்த ரவுடிகள் இவங்ககிட்ட இனி எதுவும் பேசமுடியாது நடந்ததை அப்பாகிட்ட சொல்லி என்ன செய்யலாம் என யோசிக்கலாம் இப்போதைக்கு இங்கிருந்து கிளம்புவது தான் சரியென அவரை அழைத்துச் செல்கின்றனர். அதன்பிறகு மார்க்கெட்டில் உள்ள அனைவரும் சரவணனை கொண்டாட இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.