![IMG_20220818_095810](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/08/IMG_20220818_095810-696x411.jpg)
கடைசி நேரத்தில் அர்ச்சனா டிராமா போட ஒரு வழியாக எக்ஸாம் ஹாலுக்கு வந்த சந்தியாவுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/08/IMG_20220818_095746.jpg)
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா எக்ஸாமுக்கு தயாராகிக் கொண்டிருக்க சிவகாமி அவரை சீக்கிரம் ரெடி ஆக சொல்லி அக்கறையாக நடந்து கொள்கிறார். செந்திலை ரெடியாகிட்டு வா சந்தியாவை எக்ஸாமுக்கு கூட்டிட்டு போகணும் என சொல்ல சந்தியா அவர் வருவதா சொன்னாரு என கூறுகிறார்.
பிறகு சந்தியா சரவணனுக்காக தயாராகி காத்துக் கொண்டிருக்கிற நேரம் ஆனதால் செந்தில் அழைத்துக் கொண்டு செல்லுமாறு சிவகாமி சொல்ல அர்ச்சனா உடனே வயிறு வலிக்குது என டிராமா போட சிவகாமி சரண்யா அர்ச்சனாவை கூட இருந்து பார்த்துக்கோ நான் சந்தியாவுடன் செல்கிறேன் என கூறுகிறார். இருவரும் கிளம்பும் நேரத்தில் சரவணன் சரியாக வந்துவிட பிறகு சரவணன் சந்தியா இருவரும் எக்ஸாமுக்கு கிளம்புகின்றனர்.
செல்லும் வழியில் ரோடு அடைக்கப்பட்டிருந்ததால் சுற்றி செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது. வழியில் போலீஸ் வர மடக்கி பைக் ஆவணங்களை கேட்க சரவணன் எனக்குப் போகிறோம் வந்து காண்பிக்கிறேன் என பர்மிஷன் கேட்டு சந்தியாவை சரியான நேரத்திற்கு அழைத்து வந்து விடுகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/08/IMG_20220818_095701.jpg)
எக்ஸாம் ஹாலில் பரிசோதனை செய்யும் ஆபிஸர் பெண்களை தவறாக தொட்டு சோதனை செய்ய பரபரப்பு ஏற்படுகிறது. ஒரு பெண்ணை ரூமுக்குள் அழைத்துச் சென்று சாதனை என்ற பெயரில் தவறாக தொடுவதாகும் அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டதாகவும் வெளியே வந்து அழ சந்தியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.