சரவணனை தோற்கடிக்க துடிக்கும் சல்மாவுடன் சேர்ந்து சமைக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
Raja Rani 2 Episode Update 17.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. சரவணன் போட்டியில் தைரியமாக கலந்து கொள்ள முடிவெடுத்துள்ளார் நிலையில் இன்று அடுத்த கட்ட போட்டி தொடங்கியுள்ளது.
இந்த போட்டியில் 12 போட்டியாளர்கள் உள்ள நிலையில் அவர்கள் இருவர் இருவராக கூட்டணி சேர்ந்து ஒரே பொருளைச் சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்படுகிறது. சல்மா தனக்கு சரவணன் மட்டும் வந்து விடக்கூடாது என வேண்டிக் கொள்ள கடைசியில் அவர்கள் இருவருமே சேர்ந்து சமைக்கும் நிலை உருவாகிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கொடுக்கப்பட்ட நேரத்தில் நீங்க எதுவுமே பண்ணாதீங்க அமைதியா நில்லுங்க சமையல் விஷயத்தை நான் பார்த்துக்கிறேன். இதுவரைக்கும் நடந்த ஒரு போட்டியில் கூட நீங்க உருப்படியா ஒரு ஆணியும் புடுங்கல என கண்டபடி பேசுகிறார். பிறகு இவர்களுக்கு பாவக்காய் வைத்து ஐந்து விதமான உணவுப் பொருட்களைச் அமைக்க வேண்டும் என கூறுகின்றனர். பாவக்காய் வைத்து எதுவும் செய்யத் தெரியாததால் என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். பிறகு அதை சரவணனிடம் சொல்ல எனக்கு சமைக்கத் தெரியும் ஆனா நீங்கதான் எதுவும் செய்ய வேண்டும்னு சொல்லிட்டீங்களே அதனால நீங்களே செய்யுங்க என கூறுகிறார்.
இல்லன்னா என்கிட்ட மன்னிப்பு கேளுங்கள் என சொல்லி அவரை மன்னிப்பு கேட்க வைக்கிறார். பிறகு பாவக்காய் வைத்து 6 டிஷ் செய்கிறார். அதேசமயம் சல்மாவை நன்றாக வேலை வாங்குகிறார். கடைசியில் நடுவர்கள் ஒவ்வொரு நிமிடமும் சென்று அவர்கள் சமைத்த உணவை டேஸ்ட் செய்து வருகின்றனர்.
இறுதியாக சரவணன் மற்றும் ஷர்மா செய்த பாவற்காய் உணவுப் பொருட்களை சாப்பிட்டு அசந்து போகின்றனர். பாகற்காயை வைத்து இவ்வளவு அழகாக செய்ய முடியுமா என வியக்கின்றனர். சரவணன் கைக்கு ஒரு முத்தம் கொடுக்க விரும்புவதாக கூறி மோகன் வைத்தியா முத்தமொன்றை கொடுக்கிறார்.
பிறகு மூன்று குழுக்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகின்றன. கடைசியாக சரவணன் மற்றும் சல்மா இறுதிப்போட்டிக்கு தேர்வாகின்றனர். நடுவர்கள் சரவணன் செய்ததை வெகுவாகப் பாராட்ட குடும்பத்தார் மிகுந்த உற்சாகம் அடைகின்றனர்.
அதேசமயம் நேற்றைய எபிசோடில் பார்வதி இல்லாமல் இருந்த நிலையில் இன்றைய எபிசோடு அர்ச்சனாவை ஆளையே காணவில்லை என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.