வேலைக்கு கிளம்பிய சந்தியாவை படாதபாடு படுத்தி உள்ளார் சிவகாமி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் புதிய சந்தியாவாக ஆஷா கவுடா என்ட்ரி கொடுக்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் புதிய சந்தியாவாக ஆஷா கவுடா என்ட்ரி கொடுக்கிறார்.

இன்னைக்கு எஸ் பி ரவுண்ட்ஸ் வருவதால் சீக்கிரமாக செல்ல வேண்டும் என ஸ்டேஷனுக்கு கிளம்ப சரவணன் ஞாயிற்றுக்கிழமை கூடவா வேலை இருக்கு என கேட்க எங்களுக்கு லீவ் எல்லாம் கிடையாது எல்லா நாளும் வேலை தான். அவசியமாக லீவ் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம் அதற்கு நிறைய நிபந்தனைகள் இருக்கு என சந்தியா விளக்கம் கொடுத்துவிட்டு வேலைக்கு கிளம்பி வெளியே வர சிவகாமி சந்தியாவை வேலை வாங்க திட்டமிடுகிறார்.

ஏற்கனவே ஆதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் நான் வெஜ் வேண்டும் என கேட்டுக் கொண்டிருக்க சந்தியா வெளியே வந்ததும் அவரை மார்க்கெட்டுக்குச் சென்று மீன் வாங்கி வர சொல்ல சரவணன் செந்தில் நான் போய் வருகிறேன் என சொல்ல சிவகாமி அதெல்லாம் வேண்டாம் என மறுப்பு தெரிவித்து சந்தியாவை அனுப்பி வைக்கிறார்.

பிறகு மார்க்கெட்டுக்கு போய் மீன் வாங்கி வரும் சந்தியா மீனை கொடுத்துவிட்டு வேலைக்கு கிளம்ப சிவகாமி அதுக்குள்ள எங்க போற அர்ச்சனாவும் ஜெஸ்ஸி வெளியே போயிருக்காங்க மீன் குழம்பு வச்சிட்டு போயிடு என சொல்ல சந்தியா மறுப்பு தெரிவிக்க முடியாமல் தவிக்கிறார்.

பிறகு சரவணன் சந்தியாவை கிச்சனுக்கு அழைத்துச் சென்று ஏற்கனவே குழம்பு வச்சாச்சு மீனைப் போட்டு கொதிக்க வச்சா மட்டும் போதும் என சொல்லி மீனை கழுவி கொடுக்க சந்தியாவை குழம்பில் போட்டு கொதிக்க வைத்து மீன் குழம்பை தயார் செய்கிறார். பிறகு சிவகாமியை உள்ளே வந்து மீன் குழம்பை ருசித்துப் பார்த்து சந்தியாவை பாராட்டி வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.

அதன்பிறகு ரவி நீ வேணும்னு தானே சந்தியாவை வேலை வாங்குன என கேட்க வீட்ல இவ இல்லாம ரெண்டு மருமகள் இருக்காங்க, இவ பாட்டுக்கு டிரஸ் மாத்திக்கிட்டு வேலைக்கு போயிட்டா இவளை பார்த்து மத்தவங்களும் வேலை செய்ய மாட்டாங்க, இப்படி பண்ணா தான் அவளுக்கும் பக்குவப்படும் என சிவகாமி விளக்கம் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.