பாட்டியை சமாதானம் செய்ய முயற்சி செய்த சந்தியாவுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் வீட்டிற்கு வந்துள்ள பாட்டி சந்தியா போலீஸ் சபை ஒரு காலமும் என்னால் சம்மதிக்க முடியாது என கூறி விட சந்தியா அதிர்ச்சியடைகிறார்.

இதனால் சந்தோஷமான அர்ச்சனா ரூமுக்குள் உற்சாகமாக பாட்டு பாடி கொண்டாடிக் கொண்டிருக்க அப்போது வந்த செந்தில் அர்ச்சனாவை கண்டபடி திட்டிவிட்டு வெளியே வருகிறார். எனக்கு அந்த சந்தியா போலீஸ் ஆக கூடாது அது ஒன்னு மட்டும் தான் ஆசை என அர்ச்சனா கூறுகிறார்.

இந்த பக்கம் சந்தியா வருத்தத்தோடு இருக்க அப்போது வந்த சரவணன் என் அப்பா கொஞ்சம் பொறுமையா இரு சரவணன் கிட்ட இந்த விஷயத்தை சொல்லாத நாமளே சரி பண்ண முயற்சி செய்யலாம் என கூறுகிறார். இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது வந்த மயிலு பாட்டி உங்கள கூப்பிடுறாங்க. அம்மாவும் பாட்டியும் கோவிலுக்கு போக இருக்காங்க உங்களையும் வர சொல்றாங்க என்ன சொல்ல சரவணன் அப்பா கோவில்ல அம்மா சாந்தமா இருப்பாங்க அவங்கள பேசி சம்மதிக்க முயற்சி செய் என சொல்லி அனுப்புகிறார்.

கோவிலுக்கு வந்த போது அங்கே கான்ஸ்டபிள் ஒருவர் நின்று கொண்டிருப்பதை பார்க்க இப்படித்தான் கால் கடக்க நின்னுகிட்டு இருக்கணும் என கூறுகிறார். பிறகு ஒரு பெண் போலீஸ் அறிந்து கொண்டிருக்க அங்கு போன பார்ட்டி என்ன ஆச்சு என கேட்க அந்த போலீஸ் இன்னைக்கு என் பொண்ணுக்கு பிறந்தநாள் அவளுக்கு வீடியோ கால்ல வாழ்த்து சொன்ன அவ நேர்ல வாமானு சொல்ற எனக்கு லீவு கிடைக்கல. ரொம்ப ஆசைப்பட்டு தான் இந்த வேலைக்கு வந்தேன் ஆனா இப்போ ரொம்ப கஷ்டமா இருக்கு வேலையை விடவும் முடியல என அழுகிறார். வேலையா குழந்தையான்னு வந்தா நான் குழந்தை தான் சொல்லுவேன் எப்படி ஆச்சு அதிகாரிங்க கிட்ட பேசி லீவு வாங்கிட்டு போய் குழந்தையோட இருக்கிற வழியை பாரு என சொல்கிறார்.

நாளைக்கு நீ போலீஸ் ஆனாலும் இதே கதி தான் ஏதாவது ஒரு கோவில்ல நின்னு தான் கண்ணை கசக்கிட்டு இருக்கணும். இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையா யோசிச்சு முடிவு பண்ணு என சந்தியாவிடம் கூறுகிறார். ஏண்டி சிவகாமி உனக்கும் சேர்த்து தான் சொல்றேன் என்ன பாட்டி சொல்ல சிவகாமி சரி அத்தை என கூறுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.