போட்டியில் சரவணன் மயங்கி விழுந்த நிலையில் அவருக்கு ஒரு கை செயலிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Raja Rani 2 Episode Update 14.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான இன்னொரு வாய்ப்பு அளித்த நிலையில் அதில் அர்ச்சனா மற்றும் சல்மா அவர்களின் சூழ்ச்சியால் சரவணன் தோல்வியடைந்தார். ஆனாலும் கடைசியாக வயல்காடு என்ட்ரி ஆக ஒருவர் நேரடியாக பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதாவது போட்டியாளர்களில் ஓட்டுக்களில் சரவணன் நேரடியாக பைனலுக்கு சென்றார். ‌‌

இதனையடுத்து சரவணனை நடுவர்கள் மேடைக்கு அழைத்தபோது அவர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் சரவணனுக்கு ஒரு கை செயலிழந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இது போல் அவருக்கு ஏற்கனவே நடந்து இருந்தால் எளிதாக குணப்படுத்திவிடலாம் என டாக்டர் கூறினார். இதை ஒட்டுக்கேட்ட அர்ச்சனா உடனடியாக வெளியில் அவருக்கு கை செயலிழந்து விட்டது எனக் கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

பிறகு டாக்டர் வெளியே வர சரவணின் அப்பா என்னாச்சு என கேட்க டாக்டர் சரவணனின் உடல்நிலை குறித்து சொல்லி விட்டு கிளம்பினார். பிறகு அனைவரும் உள்ளே சென்று சரவணனை பார்த்தனர். அவன் அதிகமான மன உளைச்சலுக்கு ஆளானால் இப்படி ஆகும் என சரவணனின் அப்பா கூறினார். இந்த மாதிரி ஏற்கனவே இரண்டு மூன்று முறை நடந்ததாக தெரிவித்தார். இதன் மூலம் சரவணன் எளிதாக குணம் ஆகி விடுவார் என சந்தியா ஓரளவிற்கு நிம்மதியானார். ஆனாலும் சரவணனை எப்படியாவது இந்த போட்டியில் ஜெயிக்க வைக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.

பிறகு டாக்டர் சரவணன் டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என கூறினார். அனைவரையும் காரில் ஏறு மாறு அனுப்பி வைத்துவிட்டு சந்தியாவின் சரவணன் மருந்து வாங்க சென்றிருந்தனர். இதற்குள் பதறிப்போன சிவகாமி மருத்துவமனைக்கு வந்து விடுகிறார். அனைவரும் சிவகாமியுடன் உண்மையை மறைக்க அர்ச்சனா எல்லாரும் பொய் சொல்றாங்க சரவணன் மாமாக்கு ஒரு கை விழுந்து போச்சு என கூறுகிறார். இது எல்லாத்துக்கும் சந்தியா தான் காரணம். இப்ப கூட இந்த போட்டி வேணாம்னு அவ சரவணன் மாமாவை ஊருக்கு கூட்டிட்டு வர மாட்டார். அவளுடைய புகழுக்காக சரவணன் மாமா விட உயிரை பணையம் வைத்து விட்டார் என்று கூறுகிறார். பிறகு சந்தியாவின் சரவணனும் வந்ததும் சிவகாமி சரவணனை கூட்டிக்கொண்டு சந்தியாவின் மீது கோபத்தை காட்டி விட்டு கிளம்புகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.