சிவகாமியால் சந்தியாவிற்கு பெரிய சிக்கல் உருவாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் அர்ச்சனா குழந்தையை வைத்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டிருக்க அப்போது வரும் செந்தில் குழந்தையை வாங்கி கொஞ்சுகிறார். என்னடி குழந்தை என்ன மாதிரியும் இல்ல உன்ன மாதிரியும் இல்லை நமக்கு பிறந்த மாதிரியே இல்லை என சொல்ல அர்ச்சனா அதுக்கு சாதிக்கிறார். ஐந்து தலைமுறைக்கு முன்னாடி இருந்த மாதிரி கூட இருக்கும் என சொல்லி அர்ச்சனா சமாளிக்கிறார். பிறகு செந்தில் பக்கத்து வீட்டுக்காரர் பெண் குழந்தையை வாங்கி தன்னுடைய குழந்தைகளை தெரியாமல் கொஞ்சும் போது அர்ச்சனா அதிர்ச்சியாக பார்க்கிறார்.

இப்படியான நிலையில் இந்தப் பக்கம் சிவகாமி பக்கத்து ரூமில் இருப்பவர்களிடம் சண்டை போடுகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. பிறகு போலீஸ் ஆபீஸர் கௌரியை பார்த்து ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் பக்கத்து பக்கத்துல ரூம் போட்டு இருக்கீங்க இது எப்படி சரியா வரும் என் மருமகளுக்கு ரூம் மாத்தி கொடுங்க என கேட்க அப்படியெல்லாம் பண்ண முடியாது என திட்டி அனுப்பி விடுகிறார்.

பிறகு ரூமுக்குள் இருக்கும் போது ஆபிசர் அங்கு வந்து அவர்களை திட்டி இனிமே ஏதாவது நடந்தால் அது சந்தியா மேல தான் ரிமார்க் ஆகும் என கூறுகிறார். பிறகு ரவியும் சரவணனும் சிவகாமியை திட்டுவது போல பேச சந்தியா அத்தை எதுவும் சொல்லாதீங்க அத்த என்னுடைய நல்லதுக்காக ரெண்டு பேர் சொன்னதுலையும் எந்த தப்பும் கிடையாது என சமாதானம் செய்கிறார். பிறகு சிவகாமி தன்னுடைய கணவருடன் சேர்ந்து கோவிலுக்கு செல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் பயிற்சியில் சிறந்து விளங்குபவர்கள் ஒரு கோப்பை ஒன்று அளிக்கப்பட்டு சொந்த ஊரில் போஸ்டிங் வழங்கப்படும் என்பதை ஒருவர் சொல்லிக் கொண்டிருப்பதை கேட்டு சிவகாமி சந்தியாவை கூட்டிக்கொண்டு இந்த கோப்பையை நீ ஜெயிக்க வேண்டும் என கூறுகிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.