சந்தியாவை தென்காசி மக்கள் கொண்டாட அர்ச்சனா கொளுத்திப் போட்ட குண்டால் வீட்டில் பூகம்பம் வெடித்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பேப்பரில் சந்தியாவின் போட்டோ போட்டு அவரை பாராட்டி செய்தி வெளியாகி இருப்பதை படித்து குடும்பத்தார் சந்தேகப்படுகின்றனர்.
இதன் அருகில் தெரிவிப்பவர்கள் திடீரென எல்லாரும் சீக்கிரம் வெளியே வாங்க என சொல்ல வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று பார்த்தால் தென்காசி முழுக்க சந்தியா சரவணனுக்கு வைத்து பாராட்டியுள்ளனர். பிறகு ஊர் மக்கள் ஒவ்வொருவராக வந்து அவர்களுக்கு நன்றி கூறி வாழ்த்துக்கூறி செல்கின்றனர்.
இப்படி எல்லோரும் சந்தியா நீ போலீசாக வேண்டிய பொண்ணு எனும் சொல்ல சிவகாமி முகம் மாறுகிறது. பிறகு அங்கிருந்து எல்லோரையும் கூட்டி கொண்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்த சிவகாமி நேரம் மொட்டை மாடிக்குச் சென்று வெயிலில் நின்று கொண்டிருக்க எல்லோரும் அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றனர்.
இந்த நேரத்தில் அர்ச்சனா மேலே வந்து இதெல்லாம் சந்தியா சரவணன் திட்டம் போட்டு செய்த வேலைகள். சந்தியா விட்டு போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை உள்ளது அதை நிறைவேற்ற வேண்டும் என்ற ஆசை சரவணன் மாமாவுக்கு உள்ளது. இதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு சந்தியாவுக்கு பேனர் வைத்து கொண்டாட சொல்லி சரவணன் தான் ஏற்பாடு செய்திருப்பார் என சொல்ல சிவகாமியின் அமைதியாகவே இருக்க வீட்டில் உள்ளவர்கள் அர்ச்சனாவை திட்டுகின்றனர்.
ஆனால் விடாமல் அர்ச்சனா இந்த விஷயத்தில் சந்தியாவை இழுத்து விடுகிறார். ஒரு கட்டத்தில் சந்தியா அழுதுகொண்டே உள்ளே சென்று விட அதன் பிறகு செந்தில் அர்ச்சனாவை திட்டி கீழே கூட்டி வருகிறார். சிவகாமியின் அர்ச்சனா சொன்னதால் ஏதோ யோசனையில் இருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.
மேலும் இன்றைய எபிசோடுகளை விரிவாக பார்க்க விஜய் டிவி அல்லது ஹாட்ஸ்டாரில் பாருங்கள்.