பெண் குழந்தை பிறந்ததால் அர்ச்சனா அதிர்ச்சிகர விஷயத்தை செய்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சந்தியா பயிற்சிக்கு தயாராகி இருக்க அவர் போலீஸ் உடையில் வந்து இதற்கெல்லாம் காரணம் சரவணனும் அத்தையும் தான் என சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த பக்கம் அர்ச்சனா வழியில் துடித்துக் கொண்டிருக்க வலி தாங்க முடியவில்லை என சொல்ல மயிலு ஆட்டோவை அழைத்து வந்து ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கிறார். சிவகாமி பக்கத்து வீட்டாரின் மகளுக்கும் பிரசவ வலி ஏற்பட இருவரும் ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலு செந்திலுக்கு போன் போட்டுக் கொண்டே இருக்க அவன் போனை எடுக்கவில்லை.
இந்த பக்கம் சந்தியா பரோடுக்கு செல்ல சரவணன் சிவகாமி மற்றும் அவருடைய கணவர் நடந்து சென்ற போது போலீஸ் அதிகாரி ( உமா ரியாஸ் கான் ) பைக்கில் வர ரவி தவறுதலாக நடுரோட்டிற்கு சென்று விட பைக்கை நிறுத்தி அவரை திட்ட சிவகாமி பதிலுக்கு சண்டையிடுகிறார். பிறகு போலீஸ் அதிகாரி கிளம்பிச் செல்ல இந்தப் பக்கம் மருத்துவமனையில் சிவகாமி வீட்டு பக்கத்து வீடாதின் மகளுக்கு ஆண் குழந்தை பிறக்க அர்ச்சனாவுக்கு பெண் குழந்தை பிறக்கிறது.
மயிலு செந்திலுக்கு தகவல் தெரிவிக்க செல்ல பக்கத்து வீட்டு பெண்மணி கீழே கோவிலுக்கு சென்று இருக்க இருவரும் இல்லாததால் குழந்தையை காட்டாமல் தொட்டிலில் போட்டு விடுகின்றனர். பெண் குழந்தை பிறந்ததாக கேள்விப்பட்ட அர்ச்சனா அதிர்ச்சி அடைந்து மயங்கி விடுகிறார்.
இந்த பக்கம் பரோடில் எல்லோருக்கும் பயிற்சி கொடுக்க வந்திருக்கு போலீஸ் அதிகாரி உமாரியாஸ்கான் தான் என தெரியவர சரவணன் சிவகாமி உட்பட அதிர்ச்சடைகின்றனர். இத்துடன் இன்றைய ராஜா ராணி எபிசோட் முடிவடைகிறது. பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் அர்ச்சனா யாருக்கும் தெரியாமல் தனக்கு பிறந்த பெண் குழந்தையை மாற்றி வைத்துவிட்டு ஆண் குழந்தையை தூக்கி வந்து தொட்டிலில் வைத்து விடுகிறார்.