அர்ச்சனா வயிறு வலியில் துடிக்க ஆதி பணத்தை திருட திட்டம் போடுகிறான்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஆதி போனை தேடிக் கொண்டிருக்க அப்போது வரும் ஜெசி அவருடைய போனுக்கு போன் போட்டு மொபைலை கண்டுபிடித்து கொடுக்கிறார். பிறகு நான் ஒரு பியூட்டி பார்லர் ஆரம்பிக்க போறேன் என சொல்ல அதுக்கெல்லாம் அம்மா ஒத்துக்கவே மாட்டாங்க என ஆதி கூறுகிறான். அத்தை சரின்னு சொல்லிட்டாங்க சந்தியா தான் பேசி சம்மதிக்க வைத்தாள் என சொல்ல ஆதி அதிர்ச்சடைகிறான்.
பியூட்டி பார்லர் திறக்க தேவையான பொருட்களை எப்படி வாங்குவது என்கிட்ட பணம் கேட்காத சுத்தமா கிடையாது என சொல்ல என்கிட்ட கொஞ்சம் பணம் இருக்கு என ஜெஸ்ஸி கூறுகிறார். அப்பா கல்யாணத்துக்கு வந்த மொழி பணம் ரூ.50,000 அப்படியே என்கிட்ட கொடுத்துட்டாரு அத வச்சு வாங்கிக்கலாம் என சொல்ல ஆதி அப்போ அந்த பணத்தை கொடு மீதிய நான் ஏற்பாடு செய்கிறேன் என பணத்தை வாங்கிக் கொள்கிறேன்.
இந்த பக்கம் சந்தியா போலீஸ் ட்ரைனிங் வர அந்த இடத்தை பார்த்து அனைவரும் பிரம்மித்து போகின்றனர். சிவகாமி சந்தியாவை பாராட்டிக்கொண்டே இருக்க பிறகு சந்தியா உள்ளே சென்று தன்னுடைய பெயரை ரெஜிஸ்டர் செய்ய செல்கிறார். இவர்கள் அனைவரும் வெளியில் காத்துக் கொண்டிருக்க பிறகு சந்தியா போலீஸ் டிரஸ்ஸில் வந்து நிற்க சிவகாமி அதிர்ந்து போகிறார். என் கண்ணையே என்னால நம்ப முடியல என சொல்ல சரவணன் அப்பா கம்பீரமாய் இருக்க என சந்தியாவை பாராட்டுகிறார்.
இன்னொரு பக்கம் அர்ச்சனா திடீரென வயிறு வலிக்குது என வழியில் துடித்துக் கொண்டிருக்க செந்தில் வந்து எதுவும் ஆகாது நீ ரெஸ்ட் எடு நான் கடைக்கு போயிட்டு ஸ்டாக் வந்திருக்கு அதை இறக்கி வைத்து விட்டு வந்துவிடுறேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.