ஜெஸியை வலுக்கட்டாயமாக ஹாஸ்பிடல் அழைத்துச் சென்றுள்ளனர் அப்பா அம்மா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் பெற்றோர் ஜெஸ்ஸியின் பெற்றோர் அவளை வலுக்கட்டாயமாக ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர். ஹாஸ்பிடலுக்கு தான் போகிறோம் என தெரியாமல் போன ஜெஸ்ஸி பிறகு ஹாஸ்பிடல் என தெரிந்ததும் என்னை ஏது என விசாரிக்க பெற்றோர் எதுவும் சொல்லாமல் மறைக்கின்றனர்.

இதனால் சந்தேகப்படும் ஜெஸ்ஸி பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் எதுக்கு ஹாஸ்பிடல் வந்தீங்க என கேட்க அபார்ட் செய்வதற்காக வந்ததாக சொல்ல இதனால் அதிர்ச்சி அடைகிறாள். இந்த விஷயத்தை சரவணன் சந்தியாவுக்கு தெரியப்படுத்த போன் போட்டு அவர்கள் எடுக்கவில்லை. இந்த நேரத்தில் ஜெஸ்ஸியின் அம்மா வந்து அவளை உள்ளே அழைத்துச் செல்ல டாக்டர் ஜெஸ்ஸி அழைத்துக் கொண்டு சென்று பரிசோதனை செய்துவிட்டு ஜெஸ்ஸியை வெளியே அனுப்பி விடுகிறார். இதனால் அவளுக்கு சந்தேகம் அதிகமாக ஹாஸ்பிடல் போனில் இருந்து சந்தியாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவள் அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு சரவணன் சந்தியா இருவரும் ஹாஸ்பிடலுக்கு வந்து ஜெஸ்ஸி இடம் பேச எனக்கு கல்யாணம் நடந்தாலும் நடக்கலாம் இந்த குழந்தையை அவார்ட் பண்ண விட மாட்டேன் என சொல்ல மூவரும் டாக்டரிடம் சென்று ஜெஸ்ஸியின் பெற்றோர், டாக்டர் என மூவரிடமும் சத்தம் போடுகின்றனர். நாங்களே ஜெசியை கூட்டிட்டு போறேன் உங்களோட அனுப்பிடுங்க என சொல்ல பிறகு ஜெஸ்ஸியின் அம்மா எனக்கு கல்யாணமான பிறகு இரண்டு முறை கர்ப்பமாகி அபார்ட் செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

ஜெஸ்ஸி என்னைப் போலவே என்னுடைய ஜீன் என்பதால் அவருடைய கர்ப்பத்துக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதை பரிசோதனை செய்யவே டாக்டரிடம் அழைத்து வந்தோம். இது கடவுள் கொடுத்தது இதை எப்படியாவது இந்த உலகத்துக்கு நல்லபடியாக கொண்டு வர வேண்டும் என்பதுதான் எங்களுடைய எண்ணம். இந்த விஷயத்தை விடும் சொன்னால் அவள் பயப்படுவாள் என்று தான் சொல்லாமல் மறைக்கும் என கூறுகின்றனர். பிறகு ஜெஸி அம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.