ஆதி எடுத்த முடிவால் பளாரென அறைந்துள்ளார் ஜெஸ்ஸி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஜெஸ்ஸி வீட்டில் சந்தியா சரவணன் வாக்கு கொடுத்தபடி நடக்கவில்லை இதுவரை அவர்களிடம் எந்த பதிலும் வரவில்லை என பேசிக்கொண்டு இருக்க அந்த நேரத்தில் சந்தியாவும் சரவணனும் வீட்டுக்கு வருகின்றனர். அம்மா போட்ட கண்டிஷன் எதுவும் இவர்களுக்கு தெரிய வேண்டாம் என இருவரும் உள்ளே வந்து பேச ஆதி இங்கே வந்து விஷயத்தை சொன்னதை சொல்லி ஜெஸ்ஸி குடும்பத்தார் சத்தம் போடுகின்றனர்.

செய்யற தப்பு எல்லாம் செஞ்சிட்டு இப்படி உங்களால எப்படி பேச முடியுது என கூறுகின்றனர். கொஞ்சம் டைம் கேட்க அதற்கு மறுப்பு தெரிவிக்கும் அவர்கள் இனி எதுவாக இருந்தாலும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் உங்களை நம்புவதாக இல்லை என சொல்லி அனுப்பி வைத்து விடுகின்றனர். இதனால் சந்தியாவும் சரவணனும் என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போய் இருக்கின்றனர்.

பிறகு ஆதி ஜெசியை சந்தித்து பேச ஜெசி என்ன முடிவு எடுத்திருக்க என கேட்க என்ன பண்றதுன்னு தெரியல எங்க அம்மா வேற அவ்வளவு சீக்கிரம் அவங்க முடிவ மாத்திக்க மாட்டாங்க. பேசாம நாம ரெண்டு பேரும் ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கலாம் கல்யாணம் முடிஞ்சதும் அவங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும் என சொல்ல ஆதியை பளார் என அறைகிறார் ஜெசி.

ஏற்கனவே கிடைச்சா கெட்ட பேரு போதும் உங்க வீட்ல நான் ஒரு கண்ணியமான மருமகளா தான் வாழ வருவேன். இன்னும் பத்து முறை நீ இதை வந்து சொன்னாலும் இது நடக்காது போய் உங்க அம்மாவோட மனச மாத்துற வழிய பாரு என கூறுகிறார். இதனால் ஆதி அதிர்ச்சி அடைகிறான். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.