Raina Announces Retirement : இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆட்ட நாயகனாக இருந்து வருபவர்கள் எம்.எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா. இந்தியா முழுவதும் இவர்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
இந்த நிலையில் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, அதில் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்வதாக அறிவித்து இருந்தார் .
குறித்த அறிவிப்பை வெளியிட்ட எம்எஸ் தோனி – ரசிகர்கள் சோகம்
இந்நிலையில் தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியது : தான் முழு மன நிறைவுடன் தோனி வழியை தேர்ந்தெடுப்பதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். இந்த அடுத்தடுத்த அறிவிப்புகளால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.