Tamil nadu Rain

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வரும் 8 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவ மழை பெய்ய தொடங்க உள்ளது.

வங்க கடலில் 8 – ஆம் தேதி தாழ்வு நிலை உண்டாக உள்ளது. மேலும், இது ஒடிசாவை நோக்கி நகர கூடும் என்று கணித்துள்ளனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர் மழை காரணமாக அனைத்து மாவட்டங்களும் பாதுகாப்பு அளிக்க ஆயத்தமாக உள்ளன. தேசிய பேரிடர் படையினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனுப்பப்பட்டுள்ளனர்.