கையில் சிகரெட் உடன் கோரமான எழுத்தில் ராதிகா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தென்னிந்திய சினிமாவில் நடிகையாக வலம் வருபவர் ராதிகா. எண்பதுகளில் நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது படங்களில் அம்மா வேடத்தில் குணசேத்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ராதிகா சரத்குமாரை மையமாகக் கொண்டு கொலை என்ற திரைப்படம் உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் ராதிகா ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்கிறார்.
சமீபத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த புகைப்படத்தில் ராதிகா கையில் சிகெரெட்டுடன் வித்தியாசமான லக்கில் இருக்க இந்த புகைப்படம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகர்கள் புகை பிடிப்பது போல போஸ்டர்கள் வெளிவந்தாலே அது ரசிகர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருக்கும் என சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில் நடிகை ராதிகா கையில் சிகரெட்டுடன் போஸ் கொடுத்திருப்பது சர்ச்சைக்குரிய ஒன்றாக மாறியுள்ளது.