Purushothaman Is The Winner Of Saregamapa Season 3
Purushothaman Is The Winner Of Saregamapa Season 3

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் சரிகமப சீசன் 3.

மக்களின் மனம் கவர்ந்த இந்த நிகழ்ச்சியினை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீநிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடுவர்களாக இருந்து வழிநடத்தி வந்தனர்.

இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் ஜூன் 18-ம் தேதியான நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

அக்ஷயா, ஜீவன், புருஷோத்தமன், லக்ஷனா, ராகவர்ஷினி, நாகார்ஜூன் ஆகியோர் டைட்டிலை வெல்வதற்கான இறுதி போட்டியில் பங்கேற்றனர்.

ஸ்ரேயா கோஷல், ஜிவி பிரகாஷ், சந்தானம் என பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க சரிகமப சீசன் 3 கிராண்ட் பைனல் நேரடி ஒளிபரப்பாக கோலாகலமாக அரங்கேறியது.

இறுதியில் புருஷோத்தமன் இந்த நிகழ்ச்சியின் டைட்டிலை வென்று சாதனை படைத்துள்ளார். அவருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ராகவர்ஷினி இரண்டாம் இடத்தை பிடிக்க அவருக்கு 5 லட்சம் ரூபாய் பரிசும் மூன்றாவது இடத்தை பிடித்த லக்ஷனாவிற்கு 3 லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.

இந்த மூன்று இடங்களைத் தொடர்ந்து நாகர்ஜுனாவிற்கு மக்களின் மனம் கவர்ந்த பாடுகள் என்ற பெயரில் பாராட்டி ரூபாய் ஒரு லட்சம் பரிசாக வழங்கப்பட்டது.

திறமையை மட்டுமே நம்பி போட்டி போட்டு வெற்றி பெற்ற சரிகமப போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

சரிகமப சீசன் 3 நிகழ்ச்சி முடிவுக்கு வந்ததை தொடர்ந்து வரும் ஜூலை 1-ம் தேதி முதல் சரிகமப லிட்டில் சேம்ப் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.