பொருளாதாரம், தொழில் ,வேலை வாய்ப்பு உயர வேண்டும் 74 -வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கலப்பை மக்கள் இயக்க தலைவரும் ,சினிமா தயாரிப்பாளருமான PT செல்வகுமார் வேண்டுக்கோள் :
PT Selvakumar Speech in Republic Day : உலகத்தை அச்சத்தை கொண்டிருக்கும் கொரோனவால் நாம் மிக பெரிய பொருளாதார நெருக்கடியை சந்திக்க உள்ளோம் .அன்பும் அமைதியும் நிலைநாட்ட பெறவேண்டுமெனில் தொழில்வளத்தை நாம் பெருக்க வேண்டும்.
எந்த ஓரு தொழில் தொடங்குவதற்கும் வழிமுறைகள் எளிதாக்கப்பட வேண்டும். அவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டால் தான் 75 -ம் ஆண்டு பிறப்பதற்குள் இதை எல்லாம் சரி செய்தால் மட்டுமே நம் நாடு வெற்றிகரமாக இயங்கும்.
மத்திய அரசும் மாநில அரசும் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரம் காப்பாற்றப்பட வேண்டும்.
குமரி மாவட்டத்தை பசுமை பூங்காவாக மாற்ற வேண்டும் என்பதே கலப்பை மக்கள் இயக்கத்தின் நோக்கம். முன்னதாகவே கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் குமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை ஓகி புயல் வந்த போது நட்டோம்.
தற்போது இன்னும் அதிகமான மரங்களை நடுவதற்கு பேரூராட்சி உதவி இயக்குனர் கண்ணன் ,அழகப்பபுரம் பேரூராட்சி தலைவர் ராதாமணி, உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்விற்கு உதவியாக கலப்பை சட்ட ஆலோசகர் பாலகிருஷ்ணன், கலப்பை மகளிர் அணி தலைவி பேராசிரியர் LIONS கிளப் DR.ரெங்கநாயகி, கலப்பை இளைஞர் அணி தலைவர் காணிமடம் தனசேகர், கலப்பை குமரி மாவட்ட தலைவர் சிவா பண்ணீர் செல்வம் கலந்துகொண்டனர்.