தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் படம் பார்த்தால் பார்ப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என பிரபல திரைப்பட தயாரிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Producer Thirunavukkarasu Warning : வெள்ளித்திரையில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அப்படி வெளியாகும் படங்கள் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களில் திருட்டுத்தனமாக விதியாகும் கொடுமை நீண்ட நாட்களாக நடந்து வருகிறது.
இதுபோன்ற செயல்களை தடுக்க தமிழ் சினிமா தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஒன்பது குழி சம்பத் என்ற படத்தின் தயாரிப்பாளரான திருநாவுக்கரசு தங்களது படத்தை தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பார்த்தாலோ அல்லது டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பக்கங்களில் பகிர்ந்தால் அவர்களின் மீது காப்புரிமை சட்டம் பாயும்.
இதனால் சட்டத்திற்கு புறம்பான இணையதளங்களில் படம் பார்ப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 3,00,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.