Pro Kabaddi 2018 Bengaluru team wins – புரோ கபடி லீக் போட்டி தொடர் பல இடங்களில் நடந்து வருகிறது. முதல் பாதி ஆட்டம் சென்னையில் நடந்து முடிந்து இரண்டாம் பாதி ஆட்டம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி வெற்றி அடைந்து உள்ளது.
11-வது வாரமாக தொடர்ந்து நடபெற்று கொண்டு இருக்கும் கபடி லீக் போட்டியில் நேற்று இரவு இரண்டு போட்டிகள் நடந்தது.
முதல் போட்டி பெங்களூரு – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
இரண்டாவது போட்டி ஜெய்பூர் மற்றும் ஹரியானா அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
முதலில் நடந்த போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் மிகவும் மெதுவாகவே எந்த சுவாரஸ்யமும் இன்றியே இருந்தது.
பெங்களூரு அணியே ஆதிக்கம் செலுத்திய நிலையில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி அதிகம் போராட்டாமல் பெங்களூரு அணியின் வெற்றியை உறுதி செய்தது.
பெங்களூரு அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை 44-28 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாம் போட்டி, ஜெய்பூர் மற்றும் ஹையான அணிகள் இடையே கடுமையான போட்டி நடந்தது. இருந்தும் இறுதியில் ஜெய்பூர் அணி 39-30 என்ற கணக்கில் ஜெய்பூர் அணி வெற்றி பெற்றது.
மேலும், ஏ பிரிவில் மும்பை, குஜராத் மற்றும் டெல்லி அணிகள் முதல் மூன்று இடம் பிடித்து உள்ளது.
பி பிரிவில் பெங்களூரு, பாட்னா மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது.