தனது ஆரம்பகால வீடியோவை வெளியிட்டுள்ளார் ப்ரியா பவானி சங்கர்.
தமிழ் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராகவும் பயணத்தை தொடங்கி அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான காதல் முதல் கல்யாணம் வரை என்ற சீரியல் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.
இந்த சீரியலுக்குப் பிறகு வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் தற்போது பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இவர் ஜெயா டிவியில் தொகுப்பாளியாக பணியாற்றிய போது கௌதம் மேனனை பேட்டி எடுத்த வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்த பதிவில் காசு வந்தால் காக்கா கூட கலராயிடும் என சிலர் சொல்வார்கள் ஆனால் காசு சும்மா வீடு தேடி வராது அதற்காக நாம் தான் உழைக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்த ரசிகர்கள் ப்ரியா பவானி சங்கரா இது என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.