சுவிட்சர்லாந்தில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் நீர்வீழ்ச்சி ரசித்தபடி எடுத்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.

செய்தி வாசிப்பாளராக தொடங்கி சின்னத்திரை சீரியல் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான பிரியா பவானி சங்கர் ‘மேயாத மான்’ என்ற படத்தின் மூலம் வெள்ளி திரையிலும் அறிமுகமானார். அப்பிடத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்து வந்த பிரியா பவானி சங்கர் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது அருண் விஜயின் யானை, தனுஷின் திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சிம்புவின் பத்து தல, ராகவா லாரன்ஸின் ருத்ரன் போன்ற பல படங்களில் கமிட் ஆகி பிஸியாக நடித்து வருகிறார்.

இதற்கிடையில் தனது காதலனுடன் சுவிட்சர்லாந்திருக்கு சுற்றுலா சென்றுள்ள பிரியா பவானி சங்கர் கண்ணை பறிக்கும் வெள்ளை நிற சட்டையில் அங்குள்ள நீர்வீழ்ச்சியின் அருகே நின்று விதவிதமாக போஸ் கொடுத்து எடுத்து இருக்கும் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.