நடிகை பிரணிதா சுபாஷ் பாத் டப்பில் குளித்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார்.

கன்னட நடிகையான பிரணிதா சுபாஷ் கடந்த 2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘உதயன்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாஸ்’ உள்ளிட்டப் படங்களில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். கடைசியாக, அதர்வா முரளியுடன் ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்த இவர் அதற்குப்பின் தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு பிரணிதா சுபாஷ் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபரான நிதின் ராஜுவை கடந்த வருடம் காதல் திருமணம் செய்து கொண்டு கடந்த ஜூன் 11.6.2022 ஆம் தேதி ஒரு அழகான பெண் குழந்தையும் பெற்றெடுத்தார். குழந்தை பிறந்து சில மாதங்களே ஆன பிரணித்தால் தற்பொழுது தனது கணவருடன் வெக்கேஷனிற்காக மால்தீவ்ஸ்க்கு சென்றுள்ளார்.

அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வரும் பிரணிதா தற்போது பாத் டப்பில் மகிழ்ச்சியுடன் குளியல் போடும் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது பயங்கரமாக வைரல் ஆகி வருகிறது.