![images (31)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/12/images-31-696x435.jpeg)
பட வெற்றிக்காக பரிசாக கிடைத்த காரை வேண்டாம் என சொல்லி அதற்கு பதிலாக வேறொன்று கேட்டுள்ளார் பிரதீப்.
தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்தை தொடர்ந்து இவர் இயக்கிய லவ் டுடே படமும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/12/images-29.jpeg)
கோமாளி படத்தின் வெற்றிக்காக இவருக்கு கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பிரதீப் தனக்கு கார் வேண்டாம் அதற்கு பெட்ரோல் போட தன்னிடம் பணம் இருக்காது அந்த காருக்கு ஈடான பணத்தை கொடுத்தால் அடுத்த படம் எடுக்கும் வரை என்னுடைய செலவுக்காக பயன்படுத்திக் கொள்வேன் என கூறி பணத்தை வாங்கிக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/12/images-30.jpeg)
அதேபோல் கோமாளி படத்தை எடுப்பதற்கு முன்பாக இவர் தன்னுடைய வேலையை ராஜினாமா செய்த போது கிடைத்த பணத்தை படம் எடுக்கும் வரை தன்னுடைய செலவுக்காக சிறுக சிறுக செலவு செய்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.