கண்ணீருடன் பூர்ணிமா வெளியிட்ட பதிவை பார்த்து ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கடந்த ஞாயிற்றுக்கிழமை மொத்தமாக முடிவுக்கு வந்தது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் பூர்ணிமா ரவி. ஆனால் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து 16 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.
இந்த நிலையில் பூர்ணிமா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் கண்ணீருடன் பதிவிடுவதாக சொல்லி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நீங்கள் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி பாச மழையில் நனைய வைத்து விட்டீர்கள் என தெரிவித்துள்ளார். இது குய்க் த்ரில்லிங் ஜார்னி என தெரிவித்துள்ளார்.
பூர்ணிமாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் எனது பாசமழையில் நனைய வைத்தோமா? உங்க ட்விட்டர் பக்கம் உங்க பதிவுன்றதுனால என்ன வேணும்னாலும் உருட்டுவீங்களா? செய்த தவறுக்காக நீங்க மன்னிப்பு கேட்கும் வரை நாங்கள் புறக்கணிக்க தான் செய்வோம் என திட்டி தீர்த்து வருகின்றனர்.