பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்டம்மா அல்லது சொதப்பலா என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இயக்கத்தில் அவரது கனவு திரைப்படமாக வெளியாகி உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் சியான் விக்ரம், ஜெயம் ரவி, நடிகர் கார்த்தி, சரத்குமார், ஜெயராம், திரிஷா, ஐஸ்வர்யா ராய் என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்க ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகி இருப்பதால் படம் பற்றிய கதை பெரும்பாலும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆகையால் கதையை விவரிக்காமல் படத்தின் பிளஸ் மற்றும் மைனஸ் என்ன என்பதை பார்க்கலாம்.
படத்தில் நடித்துள்ள நடிகர்கள் ஒவ்வொருவரும் அவர்களின் கதாபாத்திரம் அறிந்து சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். பொன்னியின் செல்வன் நாவலை படிக்காதவர்களும் கதையை புரிந்து கொள்ளும் வகையில் மணிரத்னம் படத்தை கொண்டு சென்றுள்ளார்.
ஏ ஆர் ரகுமானின் இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ரவிவர்மன் அவர்களின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. ஜெயமோகன் அவர்களின் வசனங்கள் அனைத்தும் ரசிக்க வைக்கின்றன.
படம் தொடங்குவதே போரில் தான். இதில் சிஜி வேலைகளில் சொதப்பியுள்ளன. பொன்னியின் செல்வன் நாவலின் இடம்பெறுவது போல இல்லாமல் அங்கு ஒரு காட்சி இங்கு ஒரு காட்சி என எடுத்து கதைக்குள் சென்றிருப்பது கொஞ்சம் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் மொத்த படக்குழுவும் ஒன்று சேர்ந்து கடுமையான உழைப்பை போட்டு இந்த படத்தை உருவாக்கி உள்ளது தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்துள்ளது.