பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஐ மேக்ஸ் திரையரங்கிலும் கண்டு களிக்கலாம் என்று படக்குழு வெளியிட்டு இருக்கும் தகவலால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

மிகப்பெரிய பிரம்மாண்ட கதையான ‘கல்கி புகழ் பெற்ற பொன்னியன் செல்வன் நாவலை’ அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கியுள்ள படம் தான் “பொன்னியின் செல்வன்-1”. இதில் முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம், கார்த்திக்,ஜெயம் ரவி, திரிஷா பிரகாஷ்ராஜ், பிரபு போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமான தகவலை படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைக்கா நிறுவனம் வழங்க உள்ளது. ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகும் இப்படத்தின் அப்டேட்களை பட குழு அவ்வப்போது அறிவித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான பொன்னி நதி பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் தற்போது அடுத்த பாடலுக்கான தகவலை படக்குழு அறிவித்திருந்தது. அதேபோல் நேற்று இப்படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான ‘சோழ சோழ’ பாடலின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்கின்ற பெருமையை பெற்றுள்ளது. அதனால் இப்படத்தை ஐமேக்ஸ் திரையரங்குகளில் பிரம்மாண்டமாகவும், துல்லியமாகவும் கண்டு களிக்கலாம் என்று படகுழு தெரிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.