Pon Radhakrishnan in Sabarimala Temple – சபரிமலைக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனுக்கும், கேரள மாநில ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் என்பவருக்கும் இடையே பாஜக தொண்டர்களின் கார்களை அனுமதிப்பது தொடர்பாக, கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்நேரத்தில், பொன்.ராதா கிருஷ்ணனை யதிஷ் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்-ஐ அவமதித்ததற்க்கும், ஐபிஎஸ் அதிகாரி யதீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதை தொடர்ந்து, நேற்றிரவு, மாவட்டம் முழுதும் பேருந்துகளின் கண்ணாடிகள் கல் வீசி உடைக்கப்பட்டன.
மேலும் முழு அடைப்பு காரணமாக, கன்னியாகுமரியில் இருந்து கேரளாவிற்கு எந்த பஸ்களும் இயக்கப்படவில்லை.
மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகள், களியக்காவிளை எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டன.
இதனால், பயணிகள் தவிப்பிற்குள்ளாகி உள்ளனர். மேலும் கடைகள் அடைப்பாலும், போராட்டத்தாலும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.