political leaders wishes new year
political leaders wishes new year

political leaders wishes new year – சென்னை: “நாளை ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்”.

“தமிழக மக்களுக்கு புதிய எழுச்சி மற்றும் வளர்ச்சியை வழங்கும் ஆண்டாக 2019 அமையட்டும்!” என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் இணைந்து செயல்படுவோம் எனவும், அதற்கான ஆக்கபூர்வமான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் தெரிவித்த வாழ்த்து செய்தியில், ‘பிறந்திடும் புத்தாண்டு நமது கடின உழைப்புகள் அத்தனையும் வெற்றிகளை அள்ளித்தரட்டும்.மத நல்லிணக்கமும், சகோதர நேசமும் மேலோங்கிடும் வகையில் 2019 புத்தாண்டு அமையட்டும்” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வைகோ கூறுகையில், ‘திமுக கூட்டணி ஆட்சியமைக்கும் வகையில் தமிழக வாக்காளர்கள் உறுதியேற்க வேண்டும்’ என வைகோ கூறியுள்ளார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறுகையில்: ‘ புதுச்சேரி மாநிலத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே மாற்றத்தை கொண்டு வரும் ஆண்டாக 2019 அமையும்’ என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்களும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, ‘ஏமாற்றங்கள் விலகி மாற்றங்கள் மலரும் ஆண்டாக 2019 புத்தாண்டு அமையட்டும்! ‘ என்று வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும், துயரங்களும் பாதிப்புகளும் இன்றுடன் விலகி நாளை முதல் நல்லது நடக்கும் என்றும் மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஆனால் ஏழைகள் வாழ்வில் எந்த நன்மையும் நடப்பதில்லை அவர்களின் முன்னேற்றம் கனவாகவே உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆங்கில புத்தாண்டை கொண்டாட இருக்கும் அனைத்து மக்களும், மற்றவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என்று தமிழக தலைவர்கள் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.