திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.
Person who threatening stalin is arrested – சமீபத்தில் இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழி அவசியம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதற்கு தமிழகம் உட்பட பல மாநிலங்களிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமார் மாவட்ட பாஜக தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் நட்டாலம் சிவன்குமார் அமித்ஷாவின் கருத்தை ஆதரித்தும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்தும் தனது முகநூலில் ஒரு பதிவை இட்டிருந்தார். எனவே, அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
7 திருமணம்…20 பெண்களுடன் உல்லாசம்… போலி சப்-இன்ஸ்பெக்டர் கைது