![Periyar Issue Periyar Issue](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2018/11/Periyar-696x390.jpeg)
Periyar Issue : திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின், டிஎன்பிஎஸ்சி தேர்வில் பெரியார் பெயரில் ஜாதி குறித்து வந்திருந்த கேள்விக்கு பெரும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
மேலும் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ” தமிழ்நாடு அரசு பணியாளர்கள் மூலம் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வில், வினாத்தாளை தயாரித்தவர்கள் எவ்வளவு ஜாதி வன்மை கொண்டவர்களாக இருக்கின்றனர் என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.
திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்ற கேள்விக்கு இ.வே.ரா ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, சி.என் அண்ணாதுரை ஆகியவை பதில்களாக கொடுக்கப்பட்டிருந்தது.
இதில் ஈரோடு வெங்கடப்ப ராமசாமி என்பதன் சுருக்கம் தான் ஈ.வே.ரா . இது கூட தெரியாமல் ‘ இ’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
கேள்விகளை தயாரிதவர்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா என்று கூட தெரியவில்லை. கேள்வியை தயாரிப்பதவர்களுக்கு ஈரோடு என்பது கூட தெரியவில்லை.
இப்படிப்பட்டவர்களிடம் கேள்வித்தாளை தயாரிக்க சொன்னால் பெரியார்க்கு ஜாதி பட்டம் தானே கொடுப்பார்கள்.
1928 ஆம் ஆண்டிலேயே தனது பெயரில் இருந்து ஜாதியை நீக்கியவர் பெரியார். மேலும் சாதி பெயரை போடக் கூடாது என்று கூறியவர் பெரியார்.
சாதிப் பெருமை பேசக்கூடாது என்ற ஜாதி மாநாட்டிலேயே கூறியவர் பெரியார். எப்போதும் எந்நிலையிலும் ஒடுக்கபட்டோருடன் உடன் இருந்தவர்.
அப்படிப்பட்ட பெரியாருக்கு ஜாதி பட்டம் சூட்டுவதும், அதும் ஒரு அரசு தேர்வில் இவ்வாறு கேட்டிருப்பது அநியாயமான செயல், அதுமட்டுமல்லாது, தேர்வு எழுதுவோர் மனதில் பிற்போக்கு தனமான எண்ணங்களை விதைப்பதுவாகும்.
இதற்கு காரணமானவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் மேலும், தமிழக அரசு இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.