முடிஞ்சா இவர வச்சு ஒரு படம் எடுத்துக்காட்டுங்க பார்க்கலாம் என்று அட்லீக்கு நேரடியாக சவால் விட்டு உள்ளார் பேரரசு.

தமிழ் சினிமாவில் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இதைத்தொடர்ந்து விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கிய இவர் அதன் பிறகு ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்கி வெற்றி கண்டார். 

இந்த நிலையில் இயக்குனர் பேரரசு அட்லி பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கி எஸ்கேப் ஆகி வருவதாக தெரிவித்துள்ளார். அஜித், விஜயை வைத்து படம் எடுத்த நான் அதன் பிறகு பரத்தை வைத்து பழனி என்ற படத்தை எடுத்தேன். 

அதுபோல் அட்லி தற்போது வளர்ந்து வரும் நடிகரான கவினை வைத்து ஒரு வெற்றி படத்தை கொடுக்க சொல்லுங்கள் பார்க்கலாம். இது நான் அவருக்கு விடும் சவால் என தெரிவித்துள்ளார். பேரரசுவின் சவாலை ஏற்பாரா அட்லி என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.