Pension

Pension : தமிழகத்தில் 80 வயதை கடந்த 1,83,308 முதியோர்களுக்கு , வழங்கப்படும் ஓய்வூதியம் இனி, அஞ்சல் மூலம் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ” வங்கிகளில் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் போது ஏற்படும் கூட்ட நெரிசல்களை கருத்தில் கொண்டும் முதியோர்களின் நலன் கருதியும் புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

வயது முதிர்ந்த பயனாளிகளின் கைரேகை தேய்மானம் காரணமாக அவர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதில் வரும் சிக்கல் ஏற்படுகிறது.

இதனால் வயது முதிர்ந்த பயனாளிகளுக்கு அவர்களின் ஓய்வூதியம் அவர் அவரது வீட்டிற்கே சென்று வழங்கப்பட வேண்டுமென வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆய்வு கூட்டங்களில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், ’80 வயது கடந்து ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு அவர்களது ஓய்வூதியத்தை மீண்டும் , அஞ்சல் முறை மூலமாக அவர்களது வீட்டிற்கே சென்று வழங்கப்படவேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.

அதன்படி தமிழ்நாட்டில் முதியோர் ஓய்வூதியம் திட்டத்தின்படி, 80 வயதை கடந்த 1,83,308 முதியோர் பயனடைந்து வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுரையின்படி, முதியோர் ஓய்வூதியம் மணியார்டர் மூலம் வழங்க ஆணை பிறபிக்கபட்டுள்ளது” .

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.