![tamilisai Tamilisai Soundarjan :](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2018/09/tamilisai-696x464.jpg)
சமீப காலமாக மீடூ விவகாரம் தமிழ் சினிமா மட்டுமின்றி உலகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு பல பிரபலங்கள் வரவேற்பு அளித்து வருகின்றனர்.
தற்போது, நடிகை தனுஸ்ரீ தத்தா ஹிந்தி திரைப்பட நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் எழுப்பியுள்ளார். இதே போன்று தமிழ் திரைப்பட துறையிலும், பலர் முன் வந்து அவரவர் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மீ டூ விவகாரத்தில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பற்றி தெரிவித்து வருவதை குறித்து டிவிட்டரில் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “பெண்கள் கரும்பல்ல, இரும்பு! என்பதை நிரூபிக்கும் காலம் வந்து விட்டது!!” என கூறியுள்ளார். இதே போன்று சபரிமலை விவகாரத்தில் சபரிமலை கோவில் ஐதீகத்தை மாற்றக்கூடாது என நடிகர் ரஜினிகாந்த் கூறியதை தான் வரவேற்கிறேன் எனவும் தெரிவித்தார்.