கண்ணன், ஐஸ்வர்யா ரொமான்ஸை நேரில் பார்த்த மூர்த்தி அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
Pandian Stores Episode Update 28.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ரூமுக்குள் சென்ற மீனா ஐஸ்வர்யா நைட்டி போட்டதை பற்றி பேசுகிறார். எனக்கு விடிந்ததும் ஷாப்பிங் போகணும். கலர் கலரா நைட்டி எடுத்து காலையில, மாலையில, நைட்டுனு மாத்தி மாத்தி போடுவேன், இந்த வீட்டுல என்ன நடக்குதுனு பார்க்குறேன். கல்யாணம் ஆகி வந்த புதுசுல நைட்டி போட்டதுக்கு என்னவெல்லாம் பேசுன என கூறுகிறார். மீனாவை சமாதானம் செய்ய முயற்சி செய்தும் ஜீவாவால் முடியவில்லை. இந்த பக்கம் கதிர் உள்ளே போனதும் என்ன பேசிட்டு இருந்தீங்க என முல்லை கேட்க புது வீடு கட்டணும்னு பேசிட்டு இருந்தோம் என சொல்கிறார். புது வீட்டுக்கு போனால் நல்லா தான் இருக்கும் என முல்லை கூறுகிறார்.
இந்த பக்கம் ஐஸ்வர்யா கண்ணனிடம் இந்த வீட்டுக்கு வந்ததும் ரொமான்ஸ் குறைந்துடுச்சு என கூறுகிறார். அதன் பின்னர் கண்ணன் ஐஸ்வர்யாவிடம் நெருக்கம் காட்ட மூர்த்தி அந்த பக்கம் வந்து விடுகிறார். மானம் போச்சு, மரியாதை போச்சு என புலம்புகிறார் ஐஸ்வரியா. அதன் பின்னர் மூர்த்தி தனத்தின் கண்ணனுக்கு ரூம் வேண்டும் என்ன செய்யலாம் என பேச்சை தொடங்க தனம் நம்ம ரூம்ல படுத்துகட்டும். நாம் ஹால்ல படுத்துக்கலாம் என கூற குழந்தையை வச்சிட்டு நீ எப்படி தூங்குவ அதெல்லாம் வேண்டாம் என கூறுகிறார். தனம் பார்த்துக்கலாம் என கூறி கண்ணன் ஐஸ்வர்யாவிடம் சென்று ரூமில் படுத்துக் கொள்ளுமாறு கூறுகிறார்.
கண்ணன் தயங்க காட்ட தனம் சொன்னதை மட்டும் செய் என சொல்லி உள்ளே அனுப்பி வைக்கிறார். பிறகு மூர்த்தி வெளியே தூங்குவதை பார்த்த கதிர், ஜீவா வருத்தப்படுகின்றனர். பிறகு என்ன அண்ணே நீங்க இங்க படுத்து இருக்கீங்க என கேட்க இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் முடிவடைகிறது.