தனத்தால் பதறிப் போய் உள்ளார் மீனா. ரூம் இல்லாமல் கண்ணன், ஐஸ்வர்யா கஷ்டப்படுகின்றனர்.
Pandian Stores Episode Update 20.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தனம் கூப்பிடுவதாக ஜீவா சொன்னதும் பதறிப் போய் உள்ளேயே இருந்தார் மீனா. பிறகு ரூமுக்கு வந்த தனம் குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு வெளியே சென்றார். அதன் பிறகுதான் மீனா ரூம் கேட்க வரல இப்பதான் நிம்மதியா இருக்கு என சொன்னார்.
இந்த பக்கம் ரூமுக்குள் உள்ளே அழுது கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த கதிர் என்ன எது எனக் கேட்க ஒன்றுமில்லை என அவர் படுத்து விடுகிறார். பிறகு என்னன்னு சொல்லு என கேட்க இந்த மாசம் நான் கர்ப்பம் ஆகி விடுவேனு சந்தோஷமா இருந்தேன். ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். ஆனால் அதன்பிறகு பீரியட்ஸ் வந்துவிட்டது. எனக்கு குழந்தை பிறக்காதா என வருத்தப்படுகிறார். இதனால் கதிர் எரோதே எப்ப நடக்குமோ அதெல்லாம் அப்பப்ப சரியா நடக்கும். நீ கவலைப்படாத என அவரை சமாதானம் செய்ய பிறகு முல்லை கதிர் மடியில் படுத்துக் கொள்கிறார்.
இந்த பக்கம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் ரூம் இல்லாமல் வெளியில் படுத்து தூங்குகின்றனர். கொசு அதிகமாக இருக்கு பெஸ்ட் தலகாணி யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என ஐஸ்வர்யா சொல்ல கண்ணன் எதையும் கேட்காதே. அண்ணியை இன்னமும் கஷ்டப்படுத்த கூடாது. இருக்கிறத வைத்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என கூறுகிறார். பிறகு அங்கு வந்த தனம் இவர்களுக்கு பெட்சீட், தலையணை எடுத்து வந்து கொடுத்து சீக்கிரம் ஏதாவது ஏற்பாடு செய்கிறேன் என கூறுகிறார்.
மறுநாள் காலையில் ஜீவாவும் மீனாவின் கயல் பாப்பாவை பிறந்த நாள் என்பதால் அலங்காரம் செய்கின்றனர். இந்த பக்கம் கயலுக்கு பிறந்த நாள் என்பதால் தனம் ஸ்பெஷலாக எதையோ சமைக்கிறார். கதிரும் மூர்த்தியும் கோயிலுக்குச் சென்று பூஜை செய்து விட்டு வீட்டிற்கு வருகின்றனர். அதன் பிறகு அவர்கள் கோவில் பிரசாதத்தை தனத்தை கூப்பிட்டு கொடுக்கின்றனர். பிறகு தனம் ஜீவாவை கூப்பிட மூவரும் வெளியே வருகின்றனர்.
கயல் பாப்பா அழகாக இருப்பதை பார்த்து அனைவரும் தூக்கி கொஞ்சி பிறந்தநாள் வாழ்த்துக் கூறுகின்றனர். பிறகு மூர்த்தியின் தனமும் கயலை வைத்துக்கொண்டு போட்டோ எடுக்கின்றனர். இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட் முடிவடைகிறது.