சென்னைக்கு போகும் ஆசையில் இருந்த மீனா ஜீவா செய்த வேலையால் கடுப்பாகி உள்ளார்.
Pandian Stores Episode Update 13.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். சென்னைக்குப் போகும் ஆர்வத்தில் மீனா துணியெல்லாம் எடுத்து பேக்கில் வைத்துக் கொண்டு முல்லையிடம் ஆசையாசையாய் கூறிக் கொண்டிருக்கிறார். கல்யாணமான மூணு வருஷத்துல முதல் முறையா இப்போதான் ஜீவாவுடன் தனியாக சென்னைக்கு போகிறேன். கோயிலுக்கு போயிட்டு ரெண்டு நாளைக்கு சென்னையை சுற்றி பார்த்துவிட்டு தான் வருவேன் என மீனா கூறுகிறார்.
குரு பார்வை கோடி நன்மை : இன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு
இரவு நேரத்தில் வீட்டில் எல்லோரும் இருக்கும்போதே மீனா ஜீவாவிடம் சண்டைக்குப் போவது பற்றி பேச சென்னைக்கு போறோம் என ஷாக்காக கேட்கிறார். பிறகு தனம் மீனாவின் அப்பா தான் வந்து கோவிலுக்கு போயிட்டு வர சொன்னார். நீ, மீனா மற்றும் கயல் மூன்று பேரும் போயிட்டு வந்துடுங்க என கூறுகிறார். கயலை தூக்கிட்டு தனியாவா? மீனா வாழ தனியலாம் பாப்பாவை பார்த்திருக்க முடியாது. உங்க பாப்பாவுக்கு உடம்பு முடியாம போச்சுன்னா என்ன தான் போட்டு பாடா படுத்துவா. கோவிலுக்கு தானே குடும்பத்தோட போகலாம் என கூறுகிறார். ஜீவா சொல்வது சரிதான் என மூர்த்தியின் நாலு நாளைக்கு கடையை மூடி விடலாம். எல்லாரும் சேர்ந்து சென்னைக்கு போகலாம் என கூறுகிறார்.
இதனால் பயங்கர கடுப்பான மீனா ரூமிற்குள் ஜீவாவிடம் சண்டை போடுகிறார். நான் அவ்வளவு ஆசை ஆசையாய் இருந்தேன் இப்ப குடும்பத்தோட போகப்போறோம். உனக்கு என் கூட தனியா இருக்கணும்னு கொஞ்சம் கூட அறிவே இல்லையா. உன்னை ஏன்டா கட்டிக்கிட்டோம்னு இப்போ யோசிக்கிறேன் என மீனா சத்தம் போடுகிறார்.
கனமழையிலும் வசூல் சாதனை படைத்த Annaatthe – இத்தனை கோடி லாபமா?
இந்தப் பக்கம் முல்லை குடும்பத்தோடு வெளியூர் செல்வதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்க கதிர் எதுக்கு எல்லோரும் போகணும் என கூறுகிறார். உங்களுக்கு என் கூட வெளியே போகணும்னு ஆசை இல்லையா என முல்லை கேட்க அவங்க மூணு பேர் தனியாக சந்தோஷமாக போயிட்டு வந்து இருப்பாங்க இப்ப நாம எல்லாரும் எதுக்கு என்ன பதில் சொல்கிறார். சென்னை போனதும் அவங்கள தனியா வெளியே அனுப்பி வைக்கணும். நான் மட்டும் தனியா போகலாம் என முல்லை சொல்ல கதிரும் சரி என கூறுகிறார்.
மறுநாள் காலையில் எல்லோரும் சென்னைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நேரத்தில் மீனாவின் அப்பா வருகிறார். சென்னைக்கு கிளம்பிட்டீங்களா முதல் முறையா கயலை கூட்டிகிட்டு தனியா போற பத்திரமா இரு, கயலை நல்லபடியா பார்த்துக்கோ, எதுவாக இருந்தாலும் உடனே அப்பாவுக்கு போன் பண்ணு என கூறுகிறார்.
இந்த நேரத்தில் மூர்த்தி அவங்க இங்க தனியா போறாங்க நாங்க எல்லோரும் ஒண்ணா போகிறோம். கோவில் பரிகாரம் என்று அதனால எல்லாரும் ஒன்னா போனா நல்லா இருக்கும் என தனம் கூறுகிறார். மீனாவின் அப்பா முகம் சுருங்குகிறது. அப்படியா சரி சரி என பேசி சமாளித்து கொள்கிறார். பிறகு எல்லோரும் சென்னைக்கு கிளம்ப மீனாவிடம் அவருடைய அப்பா என்னம்மா இது எனக் கேட்க விடுங்கப்பா அதான் எல்லாரும் கிளம்பிட்டோமே, இனிமே நீங்க எதுவும் செய்யாதீங்க நாங்க பார்த்துக்குறோம் என கூறுகிறார். இத்துடன் முடிகிறது பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட்.