பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை நான்காக பிரிக்க திட்டங்கள் நடைபெறுகின்றன.

Pandian Stores Episode Update 04.10.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர். கண்ணனைக் கோவிலுக்கு அழைத்த குடும்பம் அவரை எந்த சடங்கையும் செய்யவிடாமல் தள்ளிவைத்து அசிங்கப்படுத்தியது. இதனால் கோபமான ஐஸ்வர்யா அந்த வீட்டில் கண்ணனுக்கு உரிமை இல்லையா? நாங்கள் செய்தது தவறுதான் ஆனால் அந்தத் தப்பை செய்வதற்கான காரணம் எங்களிடம் இருந்தது என பேசுகிறார்.

பண்டிகை விடுமுறை :பயணிகள் கவனிக்கவும்

தனத்தை பார்த்து எல்லாத்துக்கும் ஞாயம் சொல்ற நீங்க இதற்கு என் வாயை மூடிட்டு இருக்கீங்க என கேட்கிறார். அந்த வீட்ல கம்பெனிக்கு உரிமை இல்லையா எனக் கேட்க உரிமை இருக்கு என கூறும் தனம் வீட்டு சாவியை எடுத்துக் கொடுத்து வீட்டை பூட்டிவிட்டு தான் வந்திருக்கோம். போய்ட்டு நீங்க ரெண்டு பேரும் இருந்துக்கோங்க என சாவியை கொடுக்கிறார். இதனால் கண்ணன் ஐஸ்வர்யா என இருவரும் அதிர்ச்சி அடைந்த பின்னர் கண்ணன் நாங்க அந்த வீட்டுக்கு வர மாட்டோம். என கூறிவிட்டு அண்ணியிடம் மன்னிப்பு கேட்டு அந்த இடத்தைவிட்டு கிளம்பி வந்து விடுகிறார்.

அதன் பின்னர் தன்னுடைய அண்ணன் அண்ணி அம்மாவுடன் அமர்ந்து கொண்டிருக்கும் போது கஸ்தூரி எப்படி சொத்துல பங்கு கேட்கிறா பார்த்தியா எனக்கு கோர்த்து விட தனத்தின் அம்மா இவளும் சாவியை தூக்கி கொடுக்கிறா என கூறுகிறார். வேற என்ன பண்ண சொல்றீங்க என கேட்க நீ போன பிறகு தான் அந்த வீட்டை மீட்டார்கள். அந்த வீட்டுக்கு நீ தான் பாதி பணத்தை போட்டு இருக்க. நாங்க போட்ட நகை ஒன்னாவது உன்னிடம் இருக்கா என கேட்கிறார். உடனே கஸ்தூரி அந்த வீடு உனக்குத்தான் சொந்தம். கதிர் ஜீவா என இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடும் அது தான் சரியாக இருக்கும் என கஸ்தூரி கூறுகிறார். வீட்டை உன்மேல எழுதிக்கோ என்ன சொல்கிறார். இதனால் கோபமடைந்த தனம் நான் கிளம்புகிறேன் என அந்த இடத்தை விட்டு கிளம்பி விடுகிறார்.

விஜய்சேதிபதியை புகழ்ந்து தள்ளிய Bhagyaraj – வைரலாகும் வீடியோ

இன்னொரு பக்கம் ஜனார்த்தனன் தன்னுடைய மகள் மீனாவிடம் அந்த பொண்ணு சொத்துல பங்கு கேட்குது. நாலு பேருக்கு இந்த வீட்டில என்ன பங்கு கிடைக்கும். உனக்கு எதுக்கு அந்த வீடு. கடல் மாதிரி நம்ம வீடு இருக்கு. நீ பேசாம மாப்பிள்ளையை கூட்டிட்டு நம்ம வீட்டுக்கு வந்துடு இவர் ஒரு பக்கம் குடும்பத்தை பிரிக்கும் வேலையை பார்க்கிறார்.

வீட்டுக்கு வந்த கண்ணன் ஐஸ்வர்யாவிடம் நீ எதுக்கு அண்ணியிடம் அப்படி நடந்துகிட்ட எனக் கேட்க எதுக்கு கோவிலுக்கு கூப்பிடனும்? எல்லாரும் அசிங்கப்படுத்தும் போது எதற்கு வேடிக்கை பார்க்கணும்? என பேசிக்கொண்டிருக்க கஸ்தூரி வருகிறார். சரியா சொன்ன ஐஸூ எனக் கூறுகிறார். வாங்க சித்தி உங்களுக்காகத்தான் காத்திட்டு இருக்கோம் என கோபமாக கூறுகிறார் ஐஸ்வர்யா. இத்துடன் முடிகிறது இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.