கண்ணன், ஐஸ்வர்யாவை பார்க்க அவர்களது வீட்டுக்குச் செல்கிறார் கஸ்தூரி.

Pandian Stores Episode Update 01.10.2021 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குலதெய்வம் கோவிலுக்கு போக முடிவெடுத்துள்ள தனம் கடையிலிருந்து மூர்த்தி ஜீவா ஆகியோர் அந்த விஷயத்தை கூறுகின்றனர். இந்த நேரத்தில் முல்லையின் அப்பாவும் இங்கே வந்து விடுகிறார்.

அப்போது தனம் கண்ணனையும் கோவிலுக்கு வரச் சொல்லியிருக்கேன் என கூறுகிறார். அவனும் இந்த குடும்பம் தானே என தனம் கூற மூர்த்தியின் சரியென கூறிவிடுகிறார்.

மறுநாள் காலையில் கண்ணன் ஐஸ்வர்யா கோவிலுக்கு செல்லலாமா வேண்டாமா என்று யோசிக்கின்றனர். ஐஸ்வர்யா போகலாம் மாமா உன்னுடைய குடும்பத்தை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு என கூறுகிறார். ஆனால் கண்ணன் வேண்டாம் என கூறுகிறார். எல்லாரும் ஏதாச்சு சொல்லுவாங்க. நமக்கு படிக்க வேண்டிய வேலை இருக்கு அதனால் போக வேண்டாம் என கூறுகிறார்.

இந்த நேரத்தில் ஐஸ்வர்யா என கஸ்தூரி கூப்பிடும் சத்தம் கேட்கிறது. கண்ணன் இதில் சொன்னதில் ஐஸ்வர்யா வெளியே சென்று பார்க்க கஸ்தூரி உள்ளே வருகிறார். நேத்து ஜனார்த்தனன் கடையில் உங்களை பார்த்ததாகவும் எல்லாரும் உங்களை திட்டும்போது நீங்க எதுவும் பேசாமல் இருந்ததையும் பார்த்ததாக கூறுகிறார். அதன் பிறகு தன் நீங்கள் இருக்கும் முகவரியை கேட்டு விட்டு வந்ததாக சொல்கிறார். செஞ்ச தப்புக்கு தண்டனை அனுபவித்து இங்கே இனியும் உங்களை தள்ளி வைக்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். உங்களுக்காக நான் இருக்கேன் என கூறுகிறார்.

இந்தப் பக்கம் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிலிருந்து கிளம்பி தயாராக உள்ளனர். இவர்கள் செல்ல இருந்த கார் ரிப்பேராகி அதனை தயார் செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளனர். இதற்கிடையில் என் அண்ணனை பற்றி பேச மூர்த்தி கடுப்பாகிறார். பின்னர் வேறு கார் புக் செய்யலாம் என ஜீவாவுக்கு வந்த தனம் நம்முடைய குட்டியானை வண்டியில் போகலாம் என கூறுகிறார். வீட்டிலுள்ள எல்லாரும் நம்ப வண்டியிலேயே போகலாம் என கூற பின்னர் அந்த வண்டியில் கோவிலுக்கு கிளம்பினர். இத்துடன் முடிகிறது பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.