
தனுஷ் நடிப்பில் உருவாகி இருந்த துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி திருவிளையாடல் ஆரம்பம், 3 ஆகிய படங்களை தயாரித்த ஆர்.கே.புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தற்போது பாண்டி முனி என்ற படத்தை தயாரித்து வருகிறது.
ரூ 50 லட்சம் செலவில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து திருவாண்ணாமலை வேட்டவலம் என்ற பகுதியில் 15 நாட்கள் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தன.
இப்படத்தில் ஜாக்கி ஷெராப் முனீஸ்வரசாமி என்ற அகோரி வேடத்தில் நடிக்க மேகாலி , ஜோதி, வைஷ்ணவி ஆகிய மூவரும் நாயகிகளாக நடித்துள்ளனர்.
படம் குறித்து இயக்குனர் கூறியதாவது, திருவண்ணாமலை அருகே வேட்டவலம் ஜமீனுக்கு சொந்தமான குளம் ஒன்று உள்ளது.
ஐந்து ஏக்கர் பரப்பில் பாறைகள் நிறைந்த இடத்துக்கு நடுவே அந்த குளம் இருக்கிறது. அந்த குளத்தில் சுமார் 4000 சதுர அடி அளவுக்கு இரும்பு தூண்கள் இரும்பு பலகைகளைக் கொண்ட அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது.
அதன் மீது அமர்ந்து அகோரி வேடத்தில் ஜாக்கி ஷெராப் மற்றும் 400 அகோரிகள் பூஜை செய்வது போன்ற காட்சிகள் மிகப் பிரமாண்டமான முறையில் படமாக்கினோம்.
அத்துடன் 25 அடி உயரமுள்ள சிவன் சிலை ருத்திரதாண்டவ கோலத்தில் உருவாக்கப்பட்டு படமாக்கப்பட்டது
. இரண்டு மலைகளுக்கு இடையே தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. அதில் அகோரிகள் வலம் வருவது மாதிரியான காட்சிகளும் படமாக்கப்பட்டது.
கைலாயத்தை பிரதி எடுத்தது மாதிரியான இந்த அரங்குகள் திரையில் பிரமிப்பை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். சுமார் 50 லட்சம் ரூபாயை இதற்காக செலவு செய்திருக்கிறோம்.