P.T Selva Kumar

P.T Selva kumar : இனி வரும் காலங்களில் தமிழகம் மற்றும் இந்தியாவின் தெற்கு எல்லைப் பகுதியான குமரி நாகர்கோவில் மக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் இளைஞர்களை திரட்டி போராடுவேன் என புலி படத் தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவருமான பிடி செல்வகுமார் பேசியுள்ளார்.

தமிழகம் மற்றும் இந்தியாவின் எல்லைப் பகுதியான கன்னியாகுமரி தாய் தமிழகத்தோடு இணைந்து 62 ஆண்டுகள் ஆனதை கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கலப்பை மக்கள் இயக்கத்தின் தலைவர் பிடி செல்வகுமார் கன்னியாகுமரியை தமிழகத்தோடு இணைக்க போராடிய 108 தியாகிகளின் நினைவாக 108 ஏழை விதவைப் பெண்களுக்கு ஆட்டுக்குட்டி வழங்கி சிறப்பித்திருந்தார்.

அதன்பிறகு இந்த விழாவில் பேசிய பிடி செல்வகுமார் அவர்கள் தமிழகத்தின் எல்லை பகுதியில் உள்ள கன்னியாகுமரிக்கு அரசு முறையாக எவ்வித சலுகைகளையும் செய்து கொடுப்பதில்லை.

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இருந்த போது கூட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை முறையாக செய்யவில்லை.

மத்திய அரசிடமிருந்து நிவாரண உதவிகளை பெற்றுத்தர முயற்சி எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் இனி கன்னியாகுமரி நாகர்கோவில் போன்ற தமிழக எல்லையில் வசிக்கும் மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் இளைஞர்களை கூட்டி போராடுவேன் என உறுதியளித்துள்ளார்.

மேலும் இப்பகுதி மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்வதை என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன் எனவும் கூறியிருந்தார்.

பி. டி செல்வகுமார் வழங்கிய இந்த நலத்திட்ட உதவிகளை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம் வடநேரே அவர்கள் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.