நடிகை நிவேதா தாமஸ் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.

தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நிவேதா தாமஸ். இவர் தமிழில் நடிகர் ஜெய் உடன் இணைந்து ‘சரஸ்வதி சபதம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கமலின் ‘பாபநாசம்’ திரைப்படம் மற்றும் ரஜினியின் ‘தர்பார்’ போன்ற திரைப்படங்களில் மகளாக நடித்து பல ரசிகர்களுக்கு பரீட்சையமானார்.

தமிழ்,தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வரும் நிவேதா தாமஸ் தற்பொழுது ரத்த காயங்களுடன் இருக்கும் பயங்கரமான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.

அதாவது, நடிகை நிவேதா தாமஸ் தற்பொழுது தெலுங்கில் வெளியான “ஷாகினி டாகினி” என்ற திரைப்படத்தில் நடிகை ரெஜினா உடன் இணைந்து நடித்திருக்கிறார். அப்படத்திற்காக போடப்பட்டுள்ள மேக்கப்பை புகைப்படமாக எடுத்திருக்கிறார். அதனை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களுடன் இணைத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.