ஒரே நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து இரண்டு நடிகைகள் வெளியேறியுள்ளனர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரித்திகா தமிழ்ச்செல்வி வெளியிடுவதாக தகவல் வெளியானது. மேலும் அவருக்கு பதிலாக இனி அக்ஷிதா நடிக்க போவதாகவும் தகவல் பரவியது.
அதற்கேற்றார் போல இன்றைய எபிசோடில் அமிர்தாவாக இனி அக்ஷிதா நடிக்கிறார் என்பது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் தற்போது இவர் மட்டுமல்லாமல் இந்த சீரியலில் இருந்து இன்னொரு நடிகையின் விலகி இருப்பது உறுதியாகியுள்ளது.
செழியனுக்கு ரூட்டு விட்டு வரும் மாலினி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை தான் அவர். இதற்கு முன்னதாக நடித்து வந்த நடிகைக்கு பதிலாக இனி ரேமா நடிப்பார் என தெரியவந்துள்ளது. இவருடைய காட்சிகளும் இன்று முதல் எபிசோடில் இடம் பெற தொடங்கியுள்ளன.