வா தமிழா வா நிகழ்ச்சியில் இருந்து கரு பழனியப்பன் வெளியேறி உள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் கரு பழனியப்பன். இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான தமிழா தமிழா என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வாங்கி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய இவர் அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தொடங்கிய வா தமிழா வா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்தும் வெளியேறிவிட்டார்.
இனி அவருக்கு பதிலாக வா தமிழா வா என்ற நிகழ்ச்சியை பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.